திருவண்ணாமலை, ஜூலை 31- திருவண்ணாமலை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ஒன்றிய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், சட்ட கூலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம், அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கம் சார்பில் திரு வண்ணாமலை, போளூர், கலசபாக்கம், கீழ்பெண்ணாத்தூர், தண்டராம்பட்டு, வந்தவாசி, பெரணமல்லூர், சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி. கே. வெங்கடேசன், மாவட்டச் செயலாளர் உதயகுமார், விவ சாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் கே. கே. வெங்கடேசன், மாவட்டத் தலைவர் கணபதி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழுப்புரம் மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் சி.குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வி.மாரியப்பன், மாவட்டத் தலைவர் வி.அர்ச்சுனன், மாவட்டச் செயலாளர் கே.சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.