திருச்சிராப்பள்ளி, அக்.13 - திருச்சி தென்னூரில் உள்ள தலைமை மின்வாரிய பொறியாளர் அலுவலக வளாகத்தில் மலைக்கோட்டை பிரிவில் ராஜீவ் காந்தி என்பவர் கேங்மேனாக பணி யாற்றி வருகிறார். உரிய பாதுகாப்பு மற்றும் மின் துண்டிப்பு செய்யாமல் 110 கே.வி. மின்னோட்டம் உள்ள கம்பத்தில் ஏறி பணி செய்ய வாய்மொழி உத்தரவாக ராஜீவ் காந்தியை வற்புறுத்தி உள்ளனர். இதனால், 11 ஆயிரம் கி.வாட் மின்சாரம் தாக்கி 70 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மின்னோட்டம் உள்ள பகுதிகளில் கேங்மேன் பணியாளர்கள், பணியில் ஈடுபடுத் தப்பட மாட்டார்கள் என்ற விதியை மீறி, பணி செய்ய வைத்ததால் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்திற்கு காரணமான, உதவி செயற்பொறியாளர் அளவில் உள்ள அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கங்கள் சார்பில் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி எம்ப்ளாயீஸ் பெடரேசன் சிவ செல்வம், ஐக்கிய சங்க ஆலயமணி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்தியமைப்பு நடராஜன் ஆகி யோர் பேசினர்.