திருவாரூர், செப்.4- ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர்-விவசாயி கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து திருவாரூர் மாவட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிராமங்கள் தோறும் பிரச்சா ரம் செய்து வருகிறது. செப்.7-ஆம் தேதி நடைபெறும் மறியலில் விவ சாயிகள், தொழிலாளர்கள், விவசா யத் தொழிலாளர்களை திரட்டும் பணியிலும் கட்சி ஈடுபட்டுள்ளது இதனொரு பகுதியாக திரு வாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட புதூர் கடைத்தெரு பகுதியில் மாநி லக்குழு உறுப்பினர் ஐ.வி. நாக ராஜன், ஒன்றியச் செயலாளர் என். இடும்பையன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர் பா.கோமதி, பவுன் ராஜ், மாதவன், சுந்தரையா, சேகர் உட்பட ஏராளமானோர் துண்டுப்பிர சுரங்களை விநியோகித்துப் பிரச் சாரம் செய்தனர். கொரடாச்சேரி ஒன்றியத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் ஒன்றி யச் செயலாளர் டி.ஜெயபால், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். நன்னிலத்தில் ஒன்றியச் செய லாளர் கே.எம்.லிங்கம், மாவட்டச் செயற்குழு எம்.சேகர், உட்பட பலர் பங்கேற்றனர். பேரளத்தில் நகர்ச் செயலாளர் சீனி. ராஜேந்திரன் தலைமையில் பிரச்சாரம் நடை பெற்றது. வலங்கைமான் ஒன்றியத்தில் ஒன்றியச் செயலாளர் என்.இராதா மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.எஸ். கலியபெருமாள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
குடவாசல் ஒன்றியத்தில் தெற்குப் பகுதி ஒன்றியச் செயலா ளர் எம்.கோபிநாத், குடவாசல் நக ரில் நகரக்குழுச் செயலாளர் டி.ஜி. சேகர் மாவட்டச் செயற்குழு உறுப் பினர் எம்.கலைமணி உட்பட ஏரா ளமானோர் கலந்துகொண்டனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்டத்தில் 75-க்கும் மேற்பட்ட இடங்களில் திங் களன்று பிரச்சாரம் நடைபெற்றது. தரங்கம்பாடி, செம்பனார் கோவில் ஒன்றியக்குழுக்கள் சார் பில் திருக்கடையூரில் துவங்கிய பிரச்சாரத்தில் மாவட்டச் செயலா ளர் பி.சீனிவாசன். தரங்கம்பாடி ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்தி ரன், செம்பனார்கோவில் ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். மயிலாடுதுறை ஒன்றியம்-நகர்க்குழு சார்பில் மாப்படு கையில் துவங்கிய பிரச்சாரப்பய ணத்தில் ஒன்றியச் செயலாளர் டி.ஜி.ரவி, நகர் செயலாளர் ஏ.ஆர். விஜய், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். சீர்காழி, கொள்ளிடம் ஒன்றி யங்கள் சார்பில் சீர்காழியில் துவங்கிய பிரச்சாரப் பயணத்தில் ஒன்றியச் செயலாளர் அசோகன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.சிம்சன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருச்சிராப்பள்ளி
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை ஒன்றியத்திலுள்ள ஊனையூர், கொடும்பபட்டி, தேனூர், வளநாடு. கைகாட்டி ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரச்சாரத்தில் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் சிதம்பரம், வட்டச் செயலாளர் தியாகராசன், வட்ட குழு உறுப்பினர்கள், நடுவிப்பட்டி கிளை உறுப்பினர்கள், கல்லுப் பட்டி வாலிபர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.