அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் மெரிட் கல்வியியல் கல்லூரியில் 2015-2019 ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா கல்லூரி தாளாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்களின் இயக்குனர் இராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். உடையார்பாளையம் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) பாலசுப்பிரமணியன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.