மயிலாடுதுறை, டிச.17 - மயிலாடுதுறை மாவட்டம், திருக் கடையூர் அருகேயுள்ள டி.மணல்மேடு ஊராட்சிக்குட்பட்ட நட்சத்திரமாலை முதல் ஓடக்கரை வரை தெருவிளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்து கிடக் கிறது. உடனடியாக அப்பகுதிகளில் தெரு விளக்குகளை அமைக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் டார்ச் லைட் அடித்து நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நட்சத்திரமாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ஐயப்பன் தலைமை வகித் தார். மாவட்ட செயலாளர் அறிவழகன், மாநில செயற்குழு உறுப்பினர் ஆனந்தி, ஒன்றிய தலைவர் பவுல் சத்தியராஜ், சங்க நிர்வாகிகள் ஸ்ரீதர், மாதவன், பிரவீன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். திருக்கடையூரிலிருந்து டி. மணல்மேடு வழியாக, ஓடகரையி லிருந்து நட்சத்திரமாலை கிராமம் வரை செல்லும் சாலையோரம் தெரு விளக் குகள் இல்லாததால் இரவு நேரங் களில் அவ்வழியாக வந்து செல்லும் பொதுமக்களும், வெளியூர் சென்று கல்வி பயின்று வரும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் குறிப்பாக பெண்கள் அச்சத்துடனேயே செல்லும் நிலை நீடிக்கிறது. இந்த வழியைத்தான் கிள்ளியூர், நடுவலூர், காடுவெட்டி, இரவணியன் கோட்டகம், வளையசோழகன், கோட்ட கம் உள்ளிட்ட உட்கிராமங்களுக்கும் கீழ்மாத்தூர், மேமாத்தூர், கூடலூர், ஒட்டங்காடு, நல்லுச்சேரி உள்ளிட்ட பகுதி மக்கள் குறுக்கு வழிச்சாலையாக பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், தெருவிளக்குகள் அமைத்து தரக் கோரி ஊராட்சி நிர்வா கத்திடம் தொடர்ந்து பலமுறை முறையிட்டும், மனுக்கள் அளித்தும் எந்த பலனும் இல்லாத நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தீப்பந்தம் ஏந்தி நூதன போராட் டம் நடத்தப்படும் என அறிவித்தனர். பின்னர், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் வாலிபர் சங்கத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி 20 நாட்களுக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவ தாக உறுதியளித்தது. இதையடுத்து டார்ச் அடித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.