districts

திருவெறும்பூர் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்

திருச்சிராப்பள்ளி, பிப்.7- திருவெறும்பூர் வட்ட விவசாயி கள் அனைவருக்கும் இந்த மாத இறுதிக்குள் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என  வேளாண் அதிகாரிகள் தெரிவித்த னர். இதனால் விவசாயிகள் சங்கத் தின் சாலை மறியல் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் காப் பீட்டுத் தொகை வழங்க வேண்டும். திருவெறும்பூர் பகுதியை வறட்சி  பகுதியாக அறிவித்து நிவாரணம்  வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் சார்பில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.  இதையொட்டி திருவெறும்பூர் வருவாய் வட்டாட்சியர் தலைமை யில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் புதனன்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் நடரா ஜன், ஒன்றியச் செயலாளர் குரு நாதன், ஒன்றியத் தலைவர் கணே சன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் திருவெறும்பூர் வட்டார உதவி வேளாண் இயக்கு நர், திருவெறும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொ), காவல் உதவி ஆய் வாளர் ஆகியோர் கலந்து கொண்ட னர். பேச்சுவார்த்தையின் போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தெரிவிக்கையில், “திருவெறும்பூர் வட்டத்தில் நடப்பு பசலியாண்டில் சம்பா பருவத்தில் காவிரியில் போதிய நீர் திறக்கவில்லை. இத னால் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய முடியாத சூழலில் கடந்த  நவம்பர் மாதம் மாவட்ட ஆட்சியரின்  அறிவுறுத்தலின்பேரில் பயிர்க் காப்பீடு பிரீமியம் செலுத்தப்பட்டது.  தற்போது பயிர் காப்பீடு செய்த நபர்களில், பாதிப் பேருக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்கப் பெற்றுள்ளது. மீதமுள்ள நபர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கவில்லை. எனவே  அவர்களுக்கும் காப்பீட்டுத் தொ கையை வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். பயிர் காப்பீட்டுத் தொகை  விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு தக வல் தெரிவிக்க வேண்டும். திருவெறும்பூர் வட்டத்தினை வறட்சி பாதித்த பகுதியாக அறி வித்து திருவெறும்பூர் வட்டார விவ சாயிகள் அனைவருக்கும் வறட்சி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நவல்பட்டு பகுதி யிலுள்ள காந்தலுார், பழங்கனாங் குடி, கும்பக்குடி, சூரியூர் ஆகிய கிரா மங்களை சேர்ந்த விவசாயிகளுக் கும் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். வேளாண்மை உழவர் நலத்துறை  சார்பில் கூட்டத்தில் கலந்து கொண்ட  திருவெறும்பூர் உதவி வேளாண் இயக்குநர் பேசுகையில், “திருவெறும் பூர் வட்ட கிராமங்களில் தற்போது 33 கிராமங்களுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகையாக 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. படிப் படியாக விவசாயிகளின் வங்கிக்  கணக்கில் காப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது. மீத முள்ள அனைத்து நபர்களுக்கும் முழுவதுமாக பிப்ரவரி மாத இறுதிக் குள் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஒரே புல எண்ணில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் காப்பீடு செய்துள்ள நேர்வில் மேற் கண்ட விவசாயிகளின் விவரங்கள் பரிசீலனை செய்யப்பட்டு நடவ டிக்கை மேற்கொள்ளப்படும். இது வரை காப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்பட்ட விவசாயிகளின் விவ ரங்கள் விவசாயிகளுக்கு தெரிவிக் கப்பட்டு வருகிறது. அதன் பட்டியல் வழங்கப்படும். திருவெறும்பூர் பகு தியை வறட்சி பகுதியாக அறி வித்து வறட்சி நிவாரணம் வழங்க கோரியது தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்” என்றார். இதையடுத்து போராட்டம்  தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.