இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த அறிவிப்பை வரவேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை காமராஜர் சாலையிலுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகம் முன்பு மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் வரவேற்பு முழக்கக் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.