districts

திருச்சி முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சரின் தாயார் மறைவு: சிபிஎம் அஞ்சலி

தஞ்சாவூர், டிச.15 - ஒன்றிய நிதித்துறை முன்னாள் இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், எஸ்.எஸ்.சங்கர வடிவேல், எஸ்.எஸ்.ராஜ்குமார் ஆகியோரின் தாயாரும், மறைந்த நாட்டாணி எஸ்.சுப்பையா வன்னியரின் மனைவியுமான எஸ்.மரகதம் அம்மாள் சனிக்கிழமை இரவு காலமானார். அவரது மறைவிற்கு மாநில அமைச்சர்கள், நாடாளு மன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலு வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மாவட்டச் செய லாளர் சின்னை.பாண்டியன், மூத்த தலைவர் ஆர்.சி.பழனி வேல், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், பி.செந்தில்குமார், என்.வி.கண்ணன், என்.சுரேஷ்குமார், என்.சரவணன், மாவட்டக் குழு உறுப்பினர் என்.குருசாமி, மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், தஞ்சாவூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜ், கே.அபிமன்னன் மற்றும் மாநகரக் குழு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். ஞாயிற்றுக்கிழமை மாலை இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. 

திருச்சியில் இன்று முதல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

திருச்சிராப்பள்ளி, டிச.15 - திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கால் மற்றும் வாய்  புண் நோயான கோமாரி, வைரஸ் கிருமியால் கால்நடை களுக்கு ஏற்படும் கொடிய நோயாகும். இந்நோய் தாக்கிய கால்நடைகளுக்கு அதிக காய்ச்சல், வாய் மற்றும் கால்களில்  புண், உமிழ்நீர் வடிதல், பால் உற்பத்தி குறைதல், கரு வுறுதலில் சிரமம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்நோயிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க தடுப்பூசி அவசியம். தடுப்பூசி போடுவதால் பால் உற்பத்தி குறையும் அல்லது கருச்சிதைவு ஏற்படும் என்ற அச்சம் வேண்டாம். தடுப்பூசி மூலம் கால்நடைகளை 100 சதவீதம் பாதுகாக்க முடியும். தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின்கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 3.11 லட்சம் கால்நடை களுக்கு டிச.16 முதல் 21 நாட்களுக்கு தடுப்பூசி போடப்படும். காலை 6 மணி முதல் 9.30 மணி வரையும், மாலை 3 மணி  முதல் 5 மணி வரையும் கால்நடை பராமரிப்புத் துறையினர்  இப்பணியை மேற்கொள்வர். இக்காலத்தில் கால்நடை மருந்த கங்களும் இயங்கும். கிராமங்களுக்குச் செல்லும் கால்நடை உதவி மருத்து வர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி,  கால்நடைகளை நோயிலிருந்து பாதுகாக்க வேண்டும்” என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரண உதவி வழங்கல்

பாபநாசம், டிச.15- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு போர்வை, பாய் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதேபோல் அய்யம்பேட்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் திமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

கரூரில் மின்வாரிய  கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் 

கரூர், டிச.15 - மின் வாரியத்தை தனியாருக்கு விடுவதை கண்டித்து போராட்டம் நடத்தி வரும் சண்டிகர் மற்றும் உத்தரப்பிரதேச மின் வாரிய பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவ டிக்கை குழு சார்பில் கரூர் மாவட்ட மின்வாரிய பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் முருகவேல் தலைமை வகித்தார். எம்ப்ளாயிஸ் பெடரேசன் மாவட்டச் செயலா ளர் ரவிச்சந்திரன், பொறியாளர் கழகம் மாவட்டச் செயலா ளர் கோபி,  மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலா ளர் க.தனபால் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பல்வேறு சங்க   தலைவர்கள் கலந்து கொண்டனர். மாவட்டப்  பொருளாளர் ஈஸ்வரன் நன்றி கூறினார்.

பொருளாளர் ஈஸ்வரன் நன்றி கூறினார். கலைஞர் கைவினைத் திட்டத்தில் மானியத்துடன் வங்கிக் கடன்

திருச்சிராப்பள்ளி, டிச.13- சமூக நீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள கைவினை ஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், கைவினை ஞர்களை தொழில் முனைவோர்களாக உயர்த்திடும் உன்னத  நோக்கிலும் தமிழ்நாடு அரசு “கலைஞர் கைவினைத் திட்டம்” என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்கீழ் அதிகபட்சமாக ரூ.50,000 வரை 25 சதவீதம் மானியத்துடன் கூடிய ரூ.3 லட்சம் வங்கிக் கடனு தவியும், 2 முதல் 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்குவ தோடு, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்ப  மற்றும் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து உதவி களும் வழங்கப்படும். இதன்கீழ் பயன்பெற குறைந்தபட்ச வயது 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பட்டிய லிடப்பட்ட 25 கைவினை தொழில்களில் குறைந்தபட்சம் 5  வருட அனுபவம் இருக்க வேண்டும். கலைஞர் கைவினை திட்டத்தில் கட்டிட வேலைகள், நகை செய்தல், மரவேலைப்பாடுகள், உலோக வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், கண்ணாடி வேலைப்பாடுகள், மண்பாண்டங்கள், சுடுமண் வேலைகள், கூடை முடைதல், கயிறு, பாய் பின்னு தல், துடைப்பான்கள் செய்தல், பொம்மைகள் தயாரித்தல், மலர் வேலைப்பாடுகள், மீன் வலை தயாரித்தல், தையல் வேலை, சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை போன்ற தொழில்கள், துணி வெளுத்தல், தேய்த்தல், பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரித்தல், துணி நெய்தல் மற்றும் துணிகளில் கலை வேலைப்பாடுகள் செய்தல், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், பாசிமணி வேலைப்பாடுகள், மூங்கில், சணல், பனை ஓலை, பிரம்பு வேலைப்பாடுகள், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், கண்ணாடி வேலைப் பாடுகள், சுதை வேலைப்பாடுகள், படகு தயாரித்தல், பழங்குடி யினரின் இயற்கை சேகரிப்புகள் மற்றும் கைவினைப் பொருள்கள் உள்ளிட்ட 25 வகையான தொழில்களுக்கு மானி யத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தில் தொழில் துவங்க ஆர்வமுள்ள கைவினை கலைஞர்கள் www.msmeonlibe.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில்  மையம், திருச்சிராப்பள்ளி அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

பத்தமடையில் சி.பி.எம் புதிய அலுவலகம் திறப்பு

திருநெல்வேலி, டிச.15- நெல்லை மாவட்டம் பத்தமடையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய அலுவலகமான எஸ் கே பழனிசாமி நினை வகம் திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது. திறப்பு விழாவிற்க்கு சி.பி.எம் சேரன் மகாதேவி கிளை உறுப்பினர் கோமதி நாயகம் தலைமை  தாங்கினார், கச்சிபாவா  வரவேற்றார், கட்டிடக்குழுத் தலைவர் பக்கீர்மைதீன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார், சி.பி.எம் மத்தியக்குழு உறுப்பி னர் ஆர்.கருமலையான் புதிய   அலுவலகத்தை திறந்து வைத்து பேசி னார், முத்துமீரான் அரங்கத்தை  மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் திறந்து வைத்தார். மூத்த தோழர் வீ.பழனி, மாநிலக் குழு உறுப்பினர்கள் கே.ஜி.பாஸ்கரன், பி.கற்பகம், மாவட்டச்செயற்குழு உறுப்பினர் கள் ஆர்.மோகன், கே.மாரிச்செல்வம், சி.ஐ.டி.யு  மாவட்டச் செயலாளர் ஆர்.முருகன்,  சேரன்மகாதேவி ஒன்றியச் செயலாளர் அருள் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பேசினர்.

எண்ணெய்க்கு பதில் பெட்ரோல் தெளிப்பு? தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நிவாரணம் வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

தஞ்சாவூர், டிச.15 -  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை முதல் நுழைவாயிலில் அமைந் துள்ள முருகன் கோவிலில், கார்த்திகை தீபத்தையொட்டி டிச.13 அன்று இரவு சுமார் 7 மணியளவில் தீபம் ஏற்றுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளன.  அங்கு மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் ஒருவர், எண்ணெய்க்கு பதிலாக பெட்ரோலை தெளிக்க, மற்றொருவர் அதே  நேரம் பற்ற வைக்க, தீ பெரிய அளவுக்கு கொளுந்து விட்டு எரியத் துவங்கியது. இத னால், சாமி கும்பிட வந்திருந்த நபர்கள் மீது  தீப்பற்றியது. அதில், கூடுதலான தீக்காயங்களோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் வி.ராகுல், சிபிஎம் ஒன்றியக்  குழு உறுப்பினரான அவரது தந்தை கே.எம். வினோத், எஸ்.துரைசாமி, கே.மருதையன் ஆகியோரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தஞ்சாவூர் ஒன்றியச் செயலாளர் எஸ். கோவிந்தராசு, மாவட்டக் குழு உறுப்பினர் கே.அபிமன்னன், சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கப் பொறுப்பாளர் ஏ.வெண்மணி குமார் ஆகியோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். நடந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வர்களை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியரோ,  கோட்டாட்சியரோ, வட்டாட்சி யரோ இதுவரை சந்திக்கவில்லை. எவ்வித மான நிவாரண உதவிகளும் வழங்கப்பட வில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் போர்க்கால  அடிப்படையில் தீக்காயத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உரிய உயர் சிகிச்சை மற்றும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.  சட்ட விரோதமாக பெட்ரோலை ஊற்றி தீயை  மூட்டிய நபர்கள் மீது வழக்கு பதிந்து நட வடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூர் ஒன்றியக் குழு  வலியுறுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புக! வாலிபர் சங்கம் கோரிக்கை

புதுக்கோட்டை, டிச.15 - புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டு மென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்  புதுக்கோட்டை மாவட்டக் குழு கூட்டம் புதுக்கோட்டையில் ஞாயிறன்று நடை பெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத்  தலைவர் எஸ்.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். நடைபெற்ற வேலைகள் குறித்து  மாவட்டச் செயலாளர் ஆர்.மகாதீர் பேசி னார். மாவட்ட துணைத் தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், சரவணன், துணைச் செயலாளர் திலீபன் உள்ளிட்ட மாவட்டக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாவட்டத்தில் 24 மணிநேரமும் இயங்கக் கூடிய தாலுகா மருத்துவமனைகள் உட்பட 14 அரசு மருத்துவமனைகள் இயங்கி வரு கின்றன. இந்த மருத்துவமனைகளுக்கு அனு மதிக்கப்பட்ட மருத்துவர்கள் 101 பேர். ஆனால், தற்பொழுது 63 மருத்துவர்களே பணியாற்றி வருகின்றனர். 38 மருத்துவர் பணி யிடங்கள் காலியாக உள்ளன. இதுபோல செவிலியர் உள்ளிட்ட இதர மருத்துவப் பணி யிடங்களும் கணிசமான அளவில் காலி யாக உள்ளன. இதனால், மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகளும், வெளிநோயாளிகளும் உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல்  தவித்து வருகின்றனர். அரசு மருத்துவமனை களுக்கு ஏழை, எளிய மக்களே அதிக மாக வருகின்றனர். இவர்களின் சுகாதா ரத்தைக் கருத்தில் கொண்டு மருத்துவர் மற்றும் செவிலியர் உள்ளிட்ட காலிப்  பணியிடங்களை உடனடியாக நிரப்ப  வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டன. மேலும், மாவட்டம் முழுவதும் கன மழையால் பழுதடைந்த சாலைகளை உடன டியாக செப்பனிட வேண்டும். மழையால்  பாதிக்கப்பட்ட நெல் பயிர் சாகுபடி களையும், பழுதடைந்த வீடுகளையும் ஆய்வு  செய்து உடனே இழப்பீடு வழங்க வேண்டும்.  ஆங்காங்கே தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்த போர்க்கால அடிப்படை யில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சாலை வசதிகள் கோரி வாலிபர் சங்கம் மறியல்

நாகப்பட்டினம், டிச.15- சாலை வசதிகள் வேண்டி நாகப்பட்டினம்  ஒன்றியம் சிக்கல் கடை தெருவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், மறியல்  போராட்டம் நடைபெற்றது.  நாகை ஒன்றியம் சங்கமங்கலம், பொர வாச்சேரி ஊராட்சிகளை கண்டித்து நடை பெற்ற இந்த சாலை மறியல் போராட்டத் திற்கு நாகை வடக்கு ஒன்றிய வாலிபர் சங்க  தலைவர் எஸ்.தர்மராஜ் தலைமை வகித்தார்.  சிக்கல் பெருங்கடம்பனூர் சாலையை செப்ப னிட்டு தார்ச் சாலையாக அமைக்க வேண்டும். நாகை, சிக்கல், குற்றம் பொறுத்தான் இருப்பு, பழையனூர், புலியூர் வரை செல்லும் பேருந்தை  சரியாக முறைப் படுத்தி தடையின்றி இயக்க வேண்டும். சாலைகளில் இருபுறமும் இருக்கும் கரு வேல மரங்களை அகற்றி தூய்மைப்படுத்தி தர வேண்டும். சிக்கல், புலியூர் வரை  செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும். சங்கமங்கலம் ஊராட்சியில் 24 மணி நேரமும் தெரு விளக்கு எரிவதை தவிர்த்து, முறைப்படுத்தி தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி னர். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி.அருள்தாஸ், மாவட்டத் தலைவர் பி.எம். நன்மாறன், பொருளாளர் என்.எம்.பாலு,  ஒன்றியச் செயலாளர் ஜி.சிந்தன், வாலிபர்  சங்க கிளை பொறுப்பாளர்கள் ஆர்.ராம கிருஷ்ணன், ஆர்.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்த நிலையில்,  வருவாய் துறையினரின் பேச்சுவார்த்தையை அடுத்து மாலையில் விடுவித்தனர்.