திருவாரூர், ஜன.17 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் பேரூ ராட்சிக்குட்பட்ட நடுத்தெரு பகுதியில் வசித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும், கட்சி உறுப்பினருமான எம். தங்கவேல் (71) வயது மூப்பு காரணமாக வியாழக்கிழமை காலமானார். தோழரின் மறைவு செய்தி அறிந்த சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.முருகையன், குடவாசல் நகரச் செயலாளர் டி.ஜி.சேகர், ஒன்றியச் செயலாளர் டி.லெனின், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.லெட்சுமி ஆகியோர் அன்னாரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். ஒன்றிய, நகரக் குழு உறுப்பினர்கள், வர்க்க வெகுஜன அமைப் பின் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். வெள்ளிக்கிழமை இறுதி நிகழ்ச்சி நடை பெற்றது.