districts

img

சோழதரத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம், மார்ச் 5-  சிதம்பரம் சேத்தியாத்தோப்பு அருகே சோழதரத்தில் விக்கிர வாண்டி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் அறந்தாங்கி, சோழதரம் உள்ளிட்ட   10-க்கும் மேற்பட்ட கிராமங்களில், தேவாலயம், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளன. இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி யுள்ள  தண்டீஸ்வரர் நல்லூர் மக்கள் பயன்பாட்டிற்கு உயர் மட்ட பாலம் அமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்பாட்டத்திற்கு சிபிஎம் வட்ட செயலாளர் தேன்மொழி தலைமை தாங்கினார்.மாவட்டச்செயலாளர் கோ. மாதவன் கோரிக்கைகளை  விளக்கி பேசினார்.மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் வெற்றிவீரன், தேவேந்திரன்   உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.