அறந்தாங்கி, ஜூலை 19 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி யில் ஒன்றிய பாஜக அரசு எந்தவித விவாதங் களும் இன்றி மூன்று புதிய குற்றவியல் சட்டங் களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாக்ரிக் சுரஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாஷ்ய ஆதி னியம் என்று சமஸ்கிருதத்தில் பெயரிடப் பட்ட இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்து உள்ளன. இந்த சட்டங்கள் நீதித் துறையின் அதி காரத்தை முழுமையாக பறிப்பதாக உள்ளது. எனவே ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட வழக்கறிஞர் கிளை சார்பாக அறந்தாங்கி அம்மா உணவகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் புதுக்கோட்டை மாவட்ட வழக்கறிஞர் கிளைச் செயலாளர் அலாவுதீன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் தென்றல் கருப்பையா, அறந்தாங்கி தாலுகா செயலாளர் நாராய ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் எஸ். கவிவர்மன் கண்டன உரையாற்றினார். சிஐடியு ஒருங்கிணைப்பாளர் கருணா, விசிக தெற்கு மாவட்டச் செயலாளர் ராமநாதன் உட்பட பல வழக்கறிஞர்கள் கண்டன உரை யாற்றினர். வழக்கறிஞர் சுதா ராணி நன்றி கூறி னார்.