districts

img

சிபிஎம் டெல்டா மண்டல இடைக்குழு செயலாளர்கள் பயிற்சி முகாம்

நாகப்பட்டினம் ,ஆக. 21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில குழு சார்பில் டெல்டா மண்டல இடைக்குழு செயலாளர்கள் பயிற்சி முகாம் நாகப்பட்டினம் சிபிஐஎம் மாவட்டக் குழு அலுவலகத்தில் இரண்டு தினங்கள் நடைபெற்றது. முதல் தினமான  செவ்வாய் அன்று நடைபெற்ற காலை அமர்வில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் பரிசீலனை கடமைகளை முன் வைத்து”புதிய சூழலில் நமது கடமைகள்” என்ற தலைப்பில் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி உரையாற்றினார்.  பிற்பகலில் நடைபெற்ற அமர்வில் “தமிழக மக்களை திரட்டுவதற்கு மூன்று ஆய்வறிக்கைகளின்  வழிகாட்டுதல்கள்” என்ற தலைப்பில் மத்திய குழு உறுப்பினர் பெ.சண்முகம்  உரையாற்றினார். இரு அமர்வுகளின் முடிவில், குழு விவாதம், தொகுப்புரை நடைபெற்றது.  இரண்டாவது நாளாக  நடைபெற்ற நிறைவு அமர்வில் “கட்சி மாநாடுகளும் இடைக்குழு செயலாளர்கள் ஆற்ற வேண்டிய பணிகளும்”என்ற தலைப்பில் சி பிஐஎம் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் உரையாற்றினார். சிபிஐஎம் மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து, மாநி லக் குழு உறுப்பினரும் கீழ்வேலூர் சட்ட மன்ற உறுப்பினருமான நாகைமாலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், வி. சுப்பிரமணியன்,எம்.முருகையன் ஏ. வேணு, ப.சுபாஷ் சந்திரபோஸ், டி.லதா, என்.எம். அபுபக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.