districts

img

டெல்டா மாவட்டங்களில் போராட்டம்

தஞ்சாவூர்/திருவாரூர், பிப்.28-  கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதர வான, ஏழை, எளிய பொதுமக்கள், தொழிலா ளிகள், விவசாயிகளுக்கு எதிரான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்  டித்து தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் நாக லிங்கம், பிரிட்டோ ஆகியோர் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், ஒன்றியச் செயலாளர், கே.அபிமன்னன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.எம். இளங் கோவன், வழக்கறிஞர் கே.பன்னீர்செல்வம், வனரோஜா, சங்கிலிமுத்து, கருப்புசாமி, கோவிந்தராஜ், பார்வதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பட்டுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் ஒன்றியச் செயலாளர் எஸ். கந்தசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் கோ.நீலமேகம், எம்.செல்வம், ரெ. ஞானசூரியன், பெஞ்சமின், தனபால், சாமி நாதன், மோரிஸ் அண்ணாதுரை, முருக. சர வணன், பாலசுப்பிரமணியன், ஞானசூரியன், பாலகிருஷ்ணன், பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பேராவூரணியில் நடைபெற்ற ஆர்ப்பாட்  டத்தில் மூத்த தோழர் வீ.கருப்பையா. ஒன்றி யச் செயலாளர் (பொ) வே.ரெங்கசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.இந்துமதி,  ஏ.வி.குமாரசாமி, கோவிந்தராசு, ஜகு பர்அலி, சி.ஆர்.சிதம்பரம், பாஸ்கர், கந்த சாமி, நீலமோகன், ஜாக்குலின் மேரி, சம்சு தீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

திருவையாறில், நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி, விவ சாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் எம். பழனிஅய்யா, அனைத்து சமய நிலங்களில் குடியிருப்போர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ராம், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.பிரதீப் ராஜ்குமார் மற்றும் கே.மதியழகன், என்.அறிவழகன், எம்.கதிரவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திருவோணம் ஒன்றியம், ஊரணிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செய லாளர் பெரியசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம், விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு,  விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கோவிந்தராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் பாலச்சந்தர்,  உள் ளிட்ட பலர் பங்கேற்றனர். மதுக்கூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் மூத்த தோழர் ஆர்.காசிநாதன், ஒன்றியச்  செயலாளர் (பொ) எம்.அய்யநாதன், மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன்,  சின்னப்பொண்ணு, ஹரிதாஸ், கலாவதி, பன்னீர்செல்வம், விவசாயிகள் சங்க ஒன்றி யத் தலைவர் ஏ.எம்.வேதாச்சலம், விவசாயத்  தொழிலாளர்க சங்க ஒன்றியச் செயலாளர் பஞ்சாட்சரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்./

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் நகர் செயலாளர் கே.கே.பாபு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலாளர்   டிவி.காரல்மார்க்ஸ், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம், டி. சுப்பிரமணியன், எஸ்.சாமிநாதன், ஆறு.பிரகாஷ், நகர்மன்றத் துணைத் தலைவர் எம்.ஜெயபிரகாஷ், ஒன்றியக் கவுன்சிலர் கு.வேதாரத்தினம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  கொரடாச்சேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் ஒன்றியச் செய லாளர் டி.ஜெயபால், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கே.சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். குடவாசலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் கட்சியின் நகர் செயலாளர் டி.ஜி.சேகர், ஒன்றியச் செயலாளர் எம்.கோபிநாத், மாவட்  டச் செயற்குழு உறுப்பினர் எம்.கலைமணி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எப்.கெரக் கொரியா, ஆர்.லட்சுமி உள்ளிட்ட பலர் பங்  கேற்றனர். வலங்கைமான் ஒன்றியத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் ஒன்றியச்  செயலாளர் என்.இராதா, மாவட்டச் செயற் குழு உறுப்பினர் வி.எஸ்.கலியபெருமாள், மாவட்டக்குழு உறுப்பினர் கே.சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மன்னார்குடி-சிஐடியு

 மன்னார்குடியில் சிஐடியு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் ஜி.ரகுபதி, மாவட்டச் செயலாளர் டி.முருகையன், ஏ.பி.டி லோக நாயகி, டி.ஜெகதீசன், வீ.கோவிந்தராஜ், ஆ. அரிகரன், உட்பட ஏராளமானோர் பங்கேற்ற னர். நீடாமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட்  கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜான்  கென்னடி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்  பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் பி.கந்தசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம், செம்ப னார்கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.பி. மார்க்ஸ், மாவட்டச் செயலாளர் பி.சீனி வாசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள்  கண்  ணகி, வீ.எம்.சரவணன், மற்றும் சிலசுப்ரமணி யன், எம்.எஸ்.ராஜேந்திரன், தெட்சிணா மூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.