தஞ்சாவூர், நவ.14 - பேராவூரணி அருகே ஆவணம் கிராமத் தில் சேதமடைந்த சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேருந்து நிறுத்தம் அருகே, சாலையில் கப்பிகள் பெயர்ந்து, பெரும் பள்ளமாக உள்ளது. பட்டுக்கோட்டை - அறந்தாங்கி முதன்மைச் சாலையான இந்தச் சாலை யில் தினசரி நூற்றுக்கணக்கான பேருந்து கள், கன ரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், இங்கிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இங்கு பல்வேறு பணிகளுக்காக தினசரி நூற்றுக் கணக்கானோர் வந்து செல்கின்றனர். சாலை பெரிய பள்ளமாக இருப்பதால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் அடிக்கடி தவறி விழுந்து காயமடை கின்றனர். மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.வி.குமார சாமி கூறுகையில், விபத்தைத் தவிர்க்கும் வகையில் சாலையில் உள்ள பள்ளத்தை மூடி, சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அலு வலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.