திருவாரூர், ஜூலை 19 - நார்த்தாங்குடி பகுதியில் அரைவட்ட பாதை அமைப்பது தொடர் பாக ஜூலை 30 அன்று அறிவிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனால் வெள்ளியன்று நடைபெற இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கை மான் வட்டம் நார்த்தாங்குடி ஊராட்சி மற்றும் கிராமத்தில் சாலை விபத்தை தடுக்க வலியுறுத்தி நார்த்தாங்குடி பேருந்து நிறுத்தம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமையில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என கட்சியின் வலங்கைமான் ஒன்றியக் குழு சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. போராட்டத்தில் சிபிஎம் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை வி.பி. மாலி பங்கேற்பதாகவும் அறிவிக்கப் பட்டிருந்தது. கட்சியின் போராட்ட அறி விப்பை அடுத்து, வலங்கைமான் வட்டாட் சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் தலைமையில் வியாழக்கிழமை பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில், மேற்குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து விபத்துகள் நிகழ்வதால் உட னடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டுள்ள மூன்று கோரிக்கை களையும் நிறைவேற்றுவதாக எழுத்துப் பூர்வமாக வட்டாட்சியர் உறுதி அளித்துள்ளார். பேச்சு வார்த்தையில், சிபிஎம் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் என்.இராதா, மாவட்டக் குழு உறுப்பி னர் கே.சுப்ரமணியன் மற்றும் பூனா யிருப்பு ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும், கும்பகோணம் - மன்னார்குடி சாலையில் தேசிய நெடுஞ்சாலையில் உயர்மின் விளக்கு கோபுரம் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறையால் ஒப்புக்கொள்ளப்பட்டது. திருவாரூர் - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், கும்பகோணம் - மன்னார்குடி நெடுஞ் சாலை சந்திப்பில் உடனடியாக அரை வட்ட பாதை அமைப்பது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை துறையினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதற்கான முடிவு ஜூலை 30 அன்று அறிவிக்கப் படும் என்று வட்டாட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் எழுத்துப்பூர்வ மாக உறுதியளித்தனர். இதையடுத்து வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப் பட்டது.