திருச்சிராப்பள்ளி, பிப்.16- மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத, விவசாயிகள் விரோத, தொழிலாளர்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து வெள்ளிக்கிழமை நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போ ராட்டம் நடைபெற்றது. தொழிலாளர் சட்டத் தொகுப்பு நான்கையும் கைவிட வேண்டும். மின்சார திருத்தச் சட்டம் 2020-ஐ திரும்பப் பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மய மாக்கக் கூடாது. வருமான வரி செலுத்த முடியாத அள வுக்கு வருவாய் இல்லாத குடும்பங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும். மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத் திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும். மாநில தொழிலாளர் நல வாரியங்களை சீர்குலைக்க கூடாது. அங்கன்வாடி, ஆஷா, சத்துணவுத் தொழிலாளர் களுக்கு குறைந்தபட்ச ஊதியமும், சமூகப் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் வெள்ளிக் கிழமை அகில இந்திய பொது வேலைநிறுத்தம், மறியல் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதனொரு பகுதியாக டெல்டா மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன.
திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் நடை பெற்ற போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்கள் சிஐடியு ரெங்கராஜன், சீனிவாசன், தொமுச ஜோசப் நெல்சன், குணசேகரன், எத்திராஜ், ஏஐடியுசி சுரேஷ், ஐஎன்டியுசி வெங்கட்நாராயணன், ஏஐசிடியு ஞானதேசிகன், ஹெச்.எம்.எஸ். ஜான்சன் ஆகியோர் தலைமை வகித்தனர். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்து, தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி புறநகர் மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் பகுதி யில் நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு புறநகர் மாவட்டத் தலைவர் சம்பத், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலை வர் நடராஜன், முருகேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏகலைவன், விவசாயத் தொழிலாளர் சங்க மண்ணச்ச நல்லூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சக்திவேல், ஐக்கிய விவசாயிகள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அயிலை. சிவசூரியன் ஆகியோர் தலைமை வகித்தனர். முசிறியில் நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் பழநிசாமி, ஒன்றி யச் செயலாளர் அசோக், சிஐடியு புறநகர் மாவட்டச் செயலா ளர் சிவராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் ராமநாதன், சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் நல்லுசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். லால்குடியில் நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் சந்தி ரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் பாலமுருகன், புள்ளம்பாடி ஒன்றியச் செயலாளர் செல்ல துரை, சிஐடியு புறநகர் மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல் வம், சிபிஐ மாரிமுத்து, கணேசன், ஜெயராமன் ஆகியோர் தலைமை வகித்தனர். துறையூரில் நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் பூமாலை, சிவானந்தம், விவசா யத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சுப்பிர மணியன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் துறையூர் ஆனந்தன், உப்பிலியபுரம் முத்துக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
துறையூரில் நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் பூமாலை, சிவானந்தம், விவசா யத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சுப்பிர மணியன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் துறையூர் ஆனந்தன், உப்பிலியபுரம் முத்துக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மணப்பாறையில் நடந்த போராட்டத்திற்கு சீனிவாசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சிதம்ப ரம், சிஐடியு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், விவசாயத் தொழிலா ளர்கள் சங்க மாவட்டப் பொருளாளர் கண்ணன், மின் ஊழி யர் சங்க மனோகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். வையம்பட்டியில் நடந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசா யிகள் சங்க ஒன்றியத் தலைவர் திருநாவுக்கரசு, ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் நவமணி, சிபிஎம் ஒன்றியச் செய லாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் தலைமை வகித்தனர். தா.பேட்டையில் நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு முருகேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க முருகேசன், விவசாய தொழிலாளர்கள் சங்க வீரவிஜயன், சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் பாண்டியன், சிஐடியு தலைவர் கோபால், மாற்றுத்திறனாளிகள் சங்க சுப்ரமணி ஆகியோர் தலைமை வகித்தனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெய பால், தொமுச மாவட்டச் செயலாளர் கு.சேவியர், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார், ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் என்.மோகன்ராஜ், ஏஐசிசிடியு மாவட்டச் செயலா ளர் கே.ராஜன், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னதாக தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தி லிருந்து ஊர்வலமாக வந்து, தலைமை அஞ்சலகம் முன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கிப்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசா யத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் பி.மாரியப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் ஆர்.வாசு ஆகியோரும், அம்மாபேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வி.தொ.ச மாநிலச் செயலாளர் கே.பக்கிரி சாமி, சிபிஎம் ஒன்றியச் செயலர் ஏ.நம்பிராஜன் ஆகியோ ரும் கண்டன உரையாற்றினர். இதேபோன்று பேராவூரணி பெரியார் சிலை அருகே, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி காந்தி சிலை, ஒரத்த நாடு, ஊரணிபுரம், சேதுபாவாசத்திரம், பெருமகளூர், பள்ளத் தூர், மந்திரிபட்டினம், பட்டுக்கோட்டை தபால் நிலையம் அருகில் ஆகிய இடங்களிலும் மறியல் நடைபெற்றது.
கும்பகோணம்
கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு, சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கண்ணன், அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் மணிமாறன், சாலை போக்குவரத்து மாநில பொருளாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திருபுவனத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் சா.ஜீவபாரதி, பக்கிரிசாமி, கைத்தறி நெசவாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் என்.பி. நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாச்சியார்கோவில் ஐஓபி வங்கி முன்பு, தேவனாஞ் சேரி கடைவீதி, திருப்புறம்பியம் கடைவீதி, கொத்தங்குடி, இன்னம்பூர், பாபராஜபுரம் ஆகிய இடங்களிலும் மறியல் நடைபெற்றது. பாபநாசம் அண்ணா சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத் திற்கு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் அப்துல்கபூர், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் முரு கேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் காதர் உசேன், முரளிதரன் ஆகி யோர் கண்டன உரையாற்றினர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்ட முழுவதும் 14 மையங்களில் மறி யல் போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகிலிருந்து மாபெ ரும் பேரணியாக புறப்பட்டு தலைமை தபால் நிலையம் எதிரே மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத் திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் பி.எஸ்.மாசிலாமணி, சிஐடியு மாவட்டத் தலை வர் எம்.கே.என்.அனிபா, ஏஐடியுசி மாவட்டத் தலைவர் ஜெ. குணசேகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம். சேகர், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் பி.கந்தசாமி, சிஐடியு மாவட்டப் பொருளாளர் இரா.மாலதி, அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ. பிரேமா உட்பட பெண்கள் பலர் கலந்து கொண்டனர். மன்னார் குடி தலைமை அஞ்சலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு விவசாய சங்கங்களின் தலைவர்கள் எஸ்.ஏகாம் பரம், கே.ராமையன் தலைமை வகித்தனர். மாவட்டச் செய லாளர் வை.செல்வராஜ் சிறப்புரையாற்றினார். திருத்துறைப்பூண்டி, கொரடாச்சேரி, நீடாமங்கலம், முத்துப்பேட்டை, குடவாசல், வலங்கைமான், எரவாஞ் சேரி, நன்னிலம் ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட தலைமை தபால் அலுவல கத்தை முற்றுகையிட்டு நடந்த போராட்டத்திற்கு தொமுச மாவட்டச் செயலாளர் கி.கணபதி, ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.மாதவன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிஐடியு மாநிலச் செயலா ளர் ஏ.ஸ்ரீதர், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ப.ஜீவானந் தம், ஐக்கிய விவசாயிகள் முன்னணி துணை ஒருங்கிணைப் பாளர் ஏ.ராமையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.தேவமணி, விதொச மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர், சிஐடியு மாவட்டத் தலை வர் கே.முகமதலிஜின்னா உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர்.
அறந்தாங்கி
அறந்தாங்கியில் கட்டுமாவடி சாலை முக்கத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் பெரியசாமி, தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.மணிமொழியன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கர்ணா ஆகியோர் தலைமையில் பேரணியாக சென்று தலைமை தபால் நிலையம் எதிரே மறியல் போராட்டம் செய்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி, மின் ஊழியர் மத்திய அமைப்பு மாவட்டச் செயலாளர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். நகர்ப்புற மின் ஊழியர்கள் 60-க்கும் மேற்பட்டோர் அலு வலகத்தை பூட்டிவிட்டு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க மண்டல செயலாளர் பொன்.நக்கீரன் தலைமை வகித்தார். ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் எஸ்.துரைராஜ், சிஐடியு மாவட்டச் செயலாளர் ப. மாரியப்பன், மாவட்டத் தலைவர் ஆர்.ரவீந்திரன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ராமர், ஐசிடிஎஸ் மாவட்டச் செயலா ளர் சி.லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கரூர்
கரூர் பேருந்து நிலையம் முன்பு உள்ள காமராஜர் சிலை யிலிருந்து பேரணியாக சென்று, கரூர் தலைமை தபால் அலு வலகம் முன்பு மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு எல்பிஎப் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.ஆர்.அண்ணாவேலு தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் போராட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கா.கந்தசாமி, மாவட்டச் செயலாளர் கே.சக்திவேல், விதொச மாவட்டச் செயலாளர் பி.ராஜூ உள்ளிட்டோர் பேசினர்.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் தலைமை அஞ்சலகம் எதிரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் கே. தங்கமணி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஏ.எஸ்.பழனி யம்மாள், எஸ்.ஆர்.ராஜேந்திரன், எல்டிஎப் எஸ்.காந்தி, ஏஐ டியுசி வி.எம்.மகேந்திரன் உள்ளிட்டோர் கண்டன உரை யாற்றினர். வேதாரண்யம் வட்டம் தகடூர் தபால் தலைமை நிலையம் மற்றும் பாப்பாகோவில் கடைத்தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் எல்பிஎப் ரெங்கசாமி, சிஐடியு அகஸ்டின், ஏஐடியுசி வீ.ஞானசேகரன், தமிழக விவசாயிகள் சங்க மாநி லச் செயலாளர் ராஜாசிதம்பரம், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் என்.செல்லதுரை, விசிக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் வீரசெங்கோலன், மாவட்டச் செய லாளர் இரத்தினவேல், ஹெச்எம்எஸ் (திராவிடர் கழகம்) தங்கராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் சிலால் கிராம கடைவீதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பிரச்சாரம் இயக்கம் நடைபெற்றது. போராட்டத்தை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம். இளங்கோவன் பேசினார். பிரச்சாரத்திற்கு கிளை தலை வர் எம்.அழகேசன் தலைமை வகித்தார். மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.அம்பிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் நடந்த மறியலுக்கு சிஐடியு மாவட்டப் பொருளாளர் கண்ணன், போக்குவரத்து திருச்சி மண்டல துணைத் தலைவர் நீலமேகம், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், கைத்தறி சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.துரைராஜ், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.அம்பிகா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். உட்கோட்டை, அண்ணாசிலை ஆகிய இடங்களிலும் மறியல் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர், சிஐடியு, ஏஐடியுசி, ஹெச்எம்எஸ், ஐஎன்டி யுசி, தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்க ள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளைத் தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.