திருச்சிராப்பள்ளி, டிச.1 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழ ரும் தா.பேட்டை ஒன்றிய முன்னாள் பெருந்தலைவரு மான தோழர் பி.தங்கவேல் (86) செவ்வாய்க்கிழமை உடல்நலக்குறைவால் கால மானார். தோழர் தங்கவேல் 1972 ஆம் ஆண்டு தன்னை கட்சி யில் இணைத்துக் கொண் டார். இவர் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினராகவும், முசிறி தாலுகா செயலாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளை யும் வகித்துள்ளார். ஒன்று பட்ட முசிறி பகுதியில் நில விய வறட்சியை போக்க அரும்பாடுபட்டவர். மறைந்த தங்கவேல் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வி.எஸ். இந்துராஜ், சந்திரன், சிவ ராஜ், ராமநாதன், பழனிச் சாமி, துறையூர் ஒன்றிய செய லாளர் ஆனந்தன், புலிவலம் முத்துக்குமார், தா.பேட்டை ஒன்றிய பெருந்தலைவர் பரிமளா உள்பட கட்சியினர், பொதுமக்கள் மலர் வளை யம் வைத்து அஞ்சலி செலுத் தினர். பின்னர் மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர் பாண்டி யன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.