திருத்துறைப்பூண்டி, அக்.2 - தோழர் பி.சீனிவாசராவ் 62 ஆம் ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தெற்கு வீதி யில் நடைபெற்றது. விவசாயத் தொழிலா ளர் சங்க ஒன்றியச் செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பால பாரதி, மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி. மாரிமுத்து, விதொச மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை, சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே.மாரிமுத்து உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அரசு அலுவலர்கள் மரியாதை தோழர் பி.சீனிவாசராவ் மணிமண்ட பத்தில் உள்ள அவரது உருவப் படத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, வட்டாட்சியர் காரல் மார்க்ஸ், ஒன்றிய பெருந் தலைவர் அ.பாஸ்கர், நகராட்சி ஆணையர் பிரதான்பாபு, நகர்மன்றத் துணைத் தலை வர் ஜெயபிரகாஷ் மற்றும் கிராம நிர்வாக அலு வலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.