districts

img

அரசுப் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு கணினி பயிற்சி

அறந்தாங்கி, பிப்.8-  தமிழக அரசு, அரசுப் பள்ளியை மேம்படுத்தும் வகையில் பள்ளியில் மேலாண்மை குழு உறுப்பினர்களை மறு கட்டமைப்பு செய்தது. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் பள்ளி மேலாண்மை குழு கூட்டங்கள் நடத்தி பள்ளிக்கு தேவையானவற்றை தீர்மானமாக ஏற்றி அதற்கான பிரத்யேக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து பள்ளியின் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றது.  மேலும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பள்ளியின் மாணவர் சேர்க்கை, சுற்றுச்சூழல், காலை ஆரோக்கிய உணவு திட்டம் முதலானவற்றிற்கும்  உறுதுணையாக இருந்து வருகின்றனர். இத்தகைய பள்ளி மேலாண்மை குழு அமைத்ததன் மூலமாக தமிழக அரசு பள்ளிகளில் பல்வேறு வகையான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.  பள்ளிக்காக உருவாக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயன்படும் வகையில் ஆவணத்தாங்கோட்டை மேற்கு நடுநிலைப்பள்ளியில் கணினி பயிற்சி வழங்க திட்டமிட்டு, வகுப்புகள் தொடங்கப்பட்டன. இத்தகைய பயிற்சி வகுப்பினை பள்ளியின் கணினி ஆசிரியர் ந.கலைச்செல்வி பயிற்றுவிக்கிறார். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இத்தகைய பயிற்சியானது நடைபெற இருக்கிறது.