புதுக்கோட்டை, மே 9 - திருவரங்குளம் புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவர்கள் கள ஆய்வுப் பணிகளை அண்மையில் மேற்கொண்ட னர். புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர்கள் கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதனொரு பகுதியாக புதுக்கோட்டை உழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்டனர். இச்சந் தையின் மூலம் விவசாயி களுக்கு ஏற்படும் நன்மை கள் குறித்தும், காய்கறி களின் விலைகள் குறித்தும், நுகர்வோருக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் கேட்ட றிந்தனர். இதேபோல, அன்ன வாசல் அருகே விளத்துப் பட்டி கிராமத்தில், கிராம தங்கல் திட்டத்தின் கிராமப் பங்கேற்பு மதிப்பீடு நடத்தி னர். இதில், வண்ணப்பொடி களைப் பயன்படுத்தி கிரா மத்தின் நில வளங்கள் மண் வளங்கள், கிராமத்தின் கால வரிசை உள்ளிட்டவற்றை வரைந்து காட்டினர். மேலும், அன்னவாசல் அருகே காலாடிப்பட்டி கிராமத்தில் தென்னை தோட்டத்தில் விவசாயத்தில் காண்டா மிருக வண்டுகளின் தாக்கு தலை கட்டுப்படுத்த இனக் கவர்ச்சி வாளிபொறி பற்றி விளக்கினர். இந்நிகழ்வு களில், கல்லூரியின் இறுதி யாண்டு மாணவிகள் பங்கேற்றனர்.