districts

img

மணமேல்குடி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

அறந்தாங்கி, நவ.11 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு மருத்து வமனையில் மருத்துவர் பற்றாக்குறை, அவசரகால சிகிச்சை பிரிவு, செவிலி யர் பற்றாக்குறை, மருத்துவ மனை சுகாதாரமின்மை உள்ளிட்ட குறைகளை சரி செய்யக் கோரி, கடந்த நவ.6  அன்று நடந்த மக்கள் தொடர்பு முகாமில் மணமேல் குடி வணிகர் கூட்டமைப்பி னர் கோரிக்கை விடுத்திருந் தனர். இந்நிலையில் சனிக் கிழமை மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு திடீ ரென வந்த மாவட்ட ஆட்சியர்  மெர்சி ரம்யா, மருத்துவ மனையின் அனைத்துப் பிரிவுகளிலும் ஆய்வு செய்து, நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் வணிகர் சங்க நிர்வா கிகளிடம் குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுப்ப தாக கூறினார்.  ஆய்வின்போது மண மேல்குடி தாசில்தார் சேக் அப்துல்லா, மணமேல்குடி ஆய்வாளர் குணசேகரன், ஊராட்சி ஆணையர் அரச மணி உள்ளிட்டோர் உடனிருந் தனர்.