districts

img

மாநகர காவல் ஆணையர் சத்ய பிரியா 200க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு குளிர் கண் கண்ணாடிகளை வழங்கினார்

திருச்சி மாநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தங்கள் கண்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாநகர காவல் ஆணையர் சத்ய பிரியா 200க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு குளிர் கண் கண்ணாடிகளை வழங்கினார். திருச்சி மாநகர காவல் துணைஆணையர் அன்பு, காவல் உதவி ஆணையர் நிவேதாலெஷ்மி ஆகியோர் உடனிருந்தனர்.