districts

img

சிஐடியு 15-வது மாநில மாநாடு தோழர் உமாநாத், பொன்மலை தியாகிகள் நினைவு ஜோதி பயணத்திற்கு உற்சாக வரவேற்பு

திருச்சிராப்பள்ளி, அக்.28 - சிஐடியு 1-5வது மாநில மாநாடு நவம்பர் 4, 5  மற்றும் 6 ஆம் தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஏற்றப்பட உள்ள தோழர் உமா நாத் நினைவு ஜோதி பயணம் ஸ்ரீரங்கத்தில் இருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டது.  இதையொட்டி ஸ்ரீரங்கம் ராகவேந்திரா ஆர்ச் அருகில் நடந்த தோழர் உமாநாத் நினைவு  ஜோதி பயண தொடக்க நிகழ்ச்சிக்கு, சிஐடியு  திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன்  தலைமை வகித்தார். தோழர் உமாநாத் நினைவு  ஜோதியை மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி எடுத்துக் கொடுக்க, அதனை சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் திருச்சி, புதுக் கோட்டை சிஐடியு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்ட ஜோதிப் பயணம் செக்போஸ்ட், அண்ணாசிலை, காந்தி மார்க்கெட், உறையூர் குறத்தெரு, மத்திய பேருந்து நிலையம், திருவெறும்பூர், டிவிஎஸ் டோல்கேட், ஏர்போர்ட், வயர்லெஸ் ரோடு, நாக மங்கலம் பகுதிகளில் பிரச்சாரம் செய்து புதுக் கோட்டை வழியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சென்றடைகிறது.
பொன்மலை தியாகிகள் நினைவு ஜோதி
திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் இந்திய தொழிற்சங்க மையத்தின் 15-வது மாநில மாநாடு பொன்மலை தியாகிகள் நினைவு  ஜோதி பயணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பிஎஸ்என்எல் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் நல்லு சாமி, சிஐடியு ஆட்டோ தொழிற்சங்க கிளை  தலைவர் அழகேசன் முன்னிலை வகித்தனர். டிஆர்இயு செயல் தலைவர் ஜானகிராமன் தலை மையில் மாநாட்டில் பங்கேற்போருக்கு வரவேற்பு  அளிக்கப்பட்டது. இதில், விசிக சட்டமன்ற தொகுதி செயலாளர் கலைச்செல்வன், காங்கி ரஸ் கட்சியை சேர்ந்த மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் காமராஜ், சிஐடியு ஆட்டோ தொழிற் சங்க கிளை பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கரூர்
பொன்மலை தியாகிகள் நினைவு ஜோதிப்பயணம் திருச்சியில் இருந்து துவங்கி கரூர் மாவட்டத்திற்கு வந்தது. பயணத்திற்கு சிஐடியு கரூர் மாவட்ட குழு சார்பில் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கரூர் ஆகிய பகுதிகளில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகில் நடைபெற்ற கூட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகேசன் வரவேற்புரையாற்றி னார். சிஐடியு மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். ஜோதி பயணக் குழு தலை வர் ஏ.ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் மா.ஜோதி பாசு, எல்ஐசி ஊழியர் சங்க தஞ்சை கோட்ட துணைத் தலைவர் வி.கணேசன், அரசு ஊழியர்  சங்க மாநில துணைத்தலைவர்கள் ஞானத் தம்பி, எம்.செல்வராணி, மாவட்ட தலைவர் எம். சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் கே.சக்தி வேல், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் ராஜா முகமது, பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்டச்  செயலாளர் ஐ.ஜான்பாட்ஷா, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.சக்திவேல், மின் ஊழியர் மத்தியமைப்பு தலைவர் தனபால், ஆரம்பப் பள்ளி ஆசிரியர்  கூட்டணி மாவட்ட செயலாளர் ஜா.ஜெயராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆர்.ஹோச்சுமின், மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அரசு போக்குவரத்து ஊழியர்  சங்க சுப்பிரமணியன், தரைக்கடை தொழிலாளர்  சங்க மாவட்ட செயலாளர் எம்.தண்டபாணி, அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர்  என்.சாந்தி, மாவட்ட தலைவர் பத்மாவதி, உழைக்கும் பெண்கள் மாவட்ட பொறுப்பாளர்  எம்.ராஜேஸ்வரி உள்ளிட்ட நூற்றுக்கணக்கா னோர் கலந்து கொண்டனர்.  முன்னதாக குளித்தலை காந்திசிலை முன்பு  நடைபெற்ற ஜோதி பயண வரவேற்பு கூட்டத் திற்கு விதொச மாவட்ட செயலாளர் இரா.முத்துச்செல்வன், கிருஷ்ணராயபுரம் பேருந்து  நிறுத்தத்தில் நடைபெற்ற வரவேற்பு கூட்டத் திற்கு விச மாவட்ட துணை தலைவர் தர்மலிங்கம்  ஆகியோர் தலைமை வகித்தனர். சிஐடியு மாவட்ட பொருளாளர் ப.சரவணன் நன்றி கூறினார்.