மயிலாடுதுறை, டிச.23 - மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் வெள்ளியன்று கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. விழாவில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் பேராயர் ஏ.கிறிஸ்டியன் சாம்ராஜ் உரையாற்றினார். மாணவர்களின் இயேசு கிறிஸ்து பிறப்பு நாடகம், பேரா சிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களின் சிறப்பு பாடல்கள், கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை யின் செயலாளர் ஆர்.தங்கபழம், ஆயர் ஜான் சன் மான்சிங், சாம்சன் மோசஸ், கல்லூரி முதல்வர் ஜான்சன் ஜெயக்குமார், காசாளர் ஜூலியஸ் விஜயகுமார் மற்றும் திருச்சபை யின் ஆட்சி மன்ற உறுப்பினர்கள், பேராசிரி யர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.