கரூர்,டிச.21- கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல் தலைமையில் டிசம்பர் 21 அன்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் சமூக பாதுகாப்புத் துறை சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மற்றும் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட மூன்று மாத நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர் களுடன் கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட அளவில் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டது. மேலும் குழந்தைகள் போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு உள்ளாவதை தடுத்தல் பொருட்டு பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுத்தவும். மேலும் பொது இடங்களில் போதை பொருள்கள் ஏதும் விற்பனை செய்வது கண்டறிந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்து சமுதாய நலத்தினை யும் குழந்தைகள் நலத்தினையும் மேம்படுத்திடவும், குழந்தைகள் இல்லங்களில் தங்கி கல்வி பயிலும் குழந்தை களின் நலன் குறித்து கேட்டறிந்தும், களப்பணியில் ஈடுபடும் அலுவலர்கள் ஒன்றிய, மாநில திட்டங்கள் மக்களுக் கும் குழந்தைகளுக்கும் நேரடியாக கொண்டு சென்று பயன் பெற உதவுமாறு தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மீ.தங்கவேல் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியா மற்றும் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.