districts

பொது சுகாதாரத்துறையில் கேரளம் பெரும் முன்னேற்றம் முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம்

எர்ணாகுளம், அக். 2-  பொது சுகாதாரத் துறையில் கேரளம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். எர்ணாகுளம் பொது மருத்துவமனை புற்றுநோய் சிறப்பு பிரிவு திறப்பு விழாவில்  முதல்வர் மேலும் பேசியதாவது:  எர்ணாகுளம் பொது மருத்துவமனை பொது சுகாதார மையமாக மாறுவதற்கு முன்பே சிறந்து விளங்கியது.  புதிய புற்று நோய் மையம் அதற்கு வேகம் தரும்.  புதிய மையம் கொச்சியின் சுகாதார முன்னேற் றத்திற்கு ஊக்கமளிக்கிறது. பொது சுகாதா ரத் துறையில் கேரளம் பெரும் முன்னேற் றம் கண்டு வருகிறது. அவற்றை அரசு மேம்படுத்தி விரிவுபடுத்தி வருகிறது. இதன் விளைவாக, சுகாதாரத் துறையில் பல முக்கிய சாதனைகள் படைக்கப் பட்டுள்ளன. பார்வையற்றோருக்கான சேவைகளுக்கான விருது சமீபத்திய உதாரணம். அதிக இலவச சிகிச்சை அளிக் கும் மாநிலமாகவும் கேரளம் மாறியது. ஆர்த்ரம் மிஷனின் பொது சுகாதார மையங்கள் நோயாளிக்கு உகந்ததாக மாற்றப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள் குடும்ப சுகாதார நிலையங்க ளாக தரம் உயர்த்தப்பட்டன. தாலுகா மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் பல்வேறு வகையான சூப்பர் ஸ்பெஷாலிட்டி வசதி கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவக் கல்லூரியின் உள்கட்டமைப்பு மேம்படுத் தப்பட்டுள்ளது. இவையனைத்தும் கார ணமாக பொது மக்கள் நம்பிக்கையுடன் தங்கக்கூடிய இடமாக அரசு மருத்துவ மனைகள் மாறியுள்ளன. இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.