அறந்தாங்கி, ஆக.20 - நாகுடி கடைமடை பகுதிக்கு வந்த காவிரி தண்ணீருக்கு விவ சாயிகள் நெல்மணிகள் மற்றும் மலர் களை தூவியும் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். இந்த ஆண்டு மேட்டூர் அணை கடந்த மாதம் திறக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து கடந்த ஜூலை 31 அன்று தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனாலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லணை கால்வாயில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றதால், இம்மாவட்டத் திற்கு தண்ணீர் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள், பணிகளை மேற்கொள்வதற்குள் தண்ணீர் வந்துவிடுமா என்று எதிர்பார்ப்போடு காத்திருந்த நிலை யில், பராமரிப்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்திவிட்டு புதுக்கோட்டை மாவட்டத் திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செவ்வாயன்று காலை கடைமடை பகுதி நாகுடிக்கு வந்த காவிரி நீரை கல்லணை கால்வாய் பாசன தாரர்கள் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் கொக்குமடை ரமேஷ் தலை மையில், சங்க நிர்வாகிகள் உள்பட திரளான விவசாயிகள் நெல்மணிகள், மலர்கள் தூவி யும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரக்கூடிய சூழலில் காவிரி நீரும் வந்து விட்டதால், இந்த ஆண்டு சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் நம்பிக்கை யோடு மேற்கொள்வார்கள் என அவர்கள் தெரிவித்தனர்.