districts

img

சாதி மறுப்பு திருமண தம்பதிகளுக்கு பரிசு

திருநெல்வேலி, பிப். 15- நெல்லை டவுனில் மாதர்சங்கம் ,வாலி பர்சங்கம் சார்பில்  காதலர்தினம் கொண்டா டப்பட்டது. இந்த நிகழ்வில் சாதிமறுப்பு திருமணம் செய்த 5 தம்பதிகள் கௌரவிக்கப்பட்டனர். நினைவுபரிசும் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் வாலிபர்சங்கம் சார்பாக  ராஜா, இசக்கிமுத்து,ராம்பிரசாத், மாதர்சங்கம் சார்பாக மாவட்டச். செயலாளர்  பி.கற்பகம், நெல்லை தாலுகா தலைவர் ராமலெட்சுமி,  செயலாளர் ஆனந்தி , துணைதலைவர் சாலியாபீவி, துணைசெயலாளர் மகேஷ்வரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை தாலுகா  செயலாளர் நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.