விருதுநகர், ஜூன் 3- விருதுநகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சிறுவர்களுக்கான கேரம் போட்டிகள் நடை பெற்றது. விருதுநகரில் தியாகி சந்துரு நினைவகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச் சிக்கு நகரத் தலைவர் மு. பொன்பாண்டி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பா ளர் சத்யா வரவேற்றார். போட்டிகளை சிஐடியு- அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மண்டல பொதுச் செயலா ளர் எம்.வெள்ளைத்துரை துவக்கி வைத்தார். வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.ஜெயபாரத் உரை யாற்றினார். இதில் போட்டி யாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.