districts

img

திண்டுக்கல்- பெங்களூருக்கு அதிவிரைவு ரயில் இயக்க வேண்டும்

திண்டுக்கல், ஜுன் 13- திண்டுக்கல்லில் இருந்து  பெங்களுருவுக்கு அதி விரைவு ரயில் இயக்க வேண்  டும் என்பன உள்ளிட்ட திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கான 25 அம்சக்  கோரிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.க்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கம்  சார்பாக மனுக் கொடுக்கப் பட்டது.  இச்சங்கங்களின் மண்ட லத்தலைவர் கிருபாகரன் தலைமையில் புதனன்று மாவட்ட நிர்வாகிகள் சிபிஎம்  அலுவலகத்தில் ஆர்.சச்சி தானந்தம் எம்.பி.யைச் சந்  தித்து வாழ்த்து தெரிவித்த னர். திண்டுக்கல்லில் இருந்து பெங்களுருவுக்கு பகல் நேரத்தில் அதி விரைவு ரயில் இயக்க வேண்டும். ஏழை எளிய நடுத்தர மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி மையங்கள் அகற்றப்பட வேண்டும். எம்.பி.நிதியிலிருந்து திருமண மண்டபம், தெருக்களில் சோலார் லைட் வசதி, மற்றும் மாவட்டத்திற்கு தேவையான வளர்ச்சி நிதி ஒதுக்கீட்டினை அதிகரித்து கொடுக்க வேண்டும். சில மணி நேரங்களில் கெட்டுப் போகும் ஈர இட்லி மாவு, தோசை மாவுக்கு தற்போது 5 விழுக்காடு வரி போடப்பட்டுள்ளதையும், மருத்துவமனையில் நோயா ளிகளுக்கு வழங்கப்படும்  பிரட், ரஸ்க்கிற்கு போடப் படும் 5 விழுக்காடு வரியை யும் நீக்க வேண்டும். தனியார்  வருமான வரி உச்சவரம்பை குறைந்த பட்சம் ரூ.10 லட்ச மாக உயர்த்தி அறிவித்து முன் மொழிந்திட வேண்டும்.  பூஜைக்கு பயன்படுத்தப் படும் கற்பூரத்திற்கு 18 விழுக்  காடு வரியை 5 விழுக்காடாக குறைக்க வேண்டும். அரிசி பருப்பு, மாவு சிறுதானியம் போன்ற பொருட்களுக்கு 25 கிலோவுக்கு கீழ் இருக் கும் பொருட்களுக்கு 5  விழுக்காடு வரியை நீக்க  வேண்டும். ஒரே நாடு ஒரே வரி என்கிற முழக்கத்திற்கு ஏற்ப 5, 12,18,28 விழுக்காடு என பல கட்ட வரி விதிப்பை ஒரே வரியாக 7 விழுக்காடு, 10 விழுக்காடு வரை ஒரு முறை வரியாக அனைத்து பொருட்களுக்கும் அறி வித்தது வணிகத்தை செம்  மைப்படுத்தி வரி ஏய்ப்பினை முழுமையாக தடுத்திட செய்  திடும் வகையில் நாடாளு மன்றத்தில் பேச வேண்டும் என்று கிருபாகரன் உள்ளிட்ட  வணிகர் சங்க தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச்செயலாளர் பி. செல்வராஜ், மாவட்டச்  செயற்குழு உறுப்பினர் பி. ஆஸாத், நகரச்செயலாளர் ஏ.அரபுமுகமது, ஒன்றியச் செயலாளர் ஆர்.சரத்குமார் உள்ளிட்டோர் உடனிருந்த னர்.             (ந.நி.)