அறந்தாங்கி, மே 20 - புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி அருகே அழியாநிலை கிராமத்தில் உள்ள ஸ்ரீ அரியாயகி அம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா நடை பெற்றது. இதையொட்டி 2 ஆம் ஆண்டு வெள்ளி தார்க்கம்புகான மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. போட்டியில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக் கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மாடுகள் கலந்து கொண்டன. இதில் பெரிய மாடு, நடு மாடு என இரண்டு பிரிவு களாக நடைபெற்றது. இரட்டை மாட்டுவண்டிகள் நிர்ணயிக்கப்பட்ட பந்தய இலக்கினை நோக்கிச் சென் றன. போட்டியில் வெற்றி பெற்ற ஒவ்வொரு பிரிவு களிலும் முதல் மூன்று இடங் களைப் பிடித்த மாட்டின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.1.60 ஆயிரம் ரொக்கப் பரிசும் கோப்பை களும் வழங்கப்பட்டன. சிறப்பு பரிசாக முதலி டத்தை பிடித்த மாடுகளுக்கு வெள்ளி தார்கம்பு வழங்கப் பட்டது. பந்தயத்தை சாலை யின் இரு புறமும் நின்று ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.