அறந்தாங்கி, பிப்.28 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருங்காடு கிராமத்தில் ஸ்ரீமுக்கண் ஈஸ்வரர் ஆலய சந்தனக்காப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் பெரியமாடு, நடுமாடு, கரிச்சான்மாடு என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. நூற்றுக்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் நிர்ணயிக்கப்பட்ட பந்தய இலக்கினை நோக்கி சீறிப்பாய்ந்தன. போட்டி யில் வென்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.2.50 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் வெற்றி கோப்பைகள் வழங்கப்பட்டன. இதனை ஆயிரக்கணக் கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். ஆவுடையார்கோ வில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.