தஞ்சாவூர், பிப்.20- அரசு, அரசு உதவிபெறும் பள்ளி களில் பார்வையற்றோருக்கு ஒரு விழுக் காடு இடஒதுக்கீடு கோரி, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற மாணவ-மாணவிகள் 45 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் உள்ள ஒருங்கி ணைந்த அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி களில் பணியாற்றும் மொத்த ஆசிரி யர்களைக் கணக்கிட்டு, அரசாணை யைப் பின்பற்றி பார்வையற்றோருக்கு ஒரு விழுக்காடு இடஒதுக்கீடு செய்து, ஆசிரியர் நியமனம் வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பார்வை மாற்றுத்திறனாளி களுக்கு நியமன தேர்வில் இருந்து முழுமையாக விலக்களித்து, உடனடி யாக பட்டதாரி ஆசிரியர் பணி நிய மனம் வழங்க வேண்டும். வேலையில்லா தோருக்கான உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகள் வலியு றுத்தி சென்னையில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் சங்கத்தினரும், பட்டதாரிகள் சங்கத்தினரும் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவாக தஞ்சாவூர் மேம்பா லம் அருகே திங்கள்கிழமை பார்வை யற்ற கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் முயற்சியில் ஈடுபட்டனர். இதேபோல, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே பார்வை யற்ற மாணவர்கள் செவ்வாய்க் கிழமை சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மேற்கு காவல் நிலையத்தினர் நிகழ்விடத் துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேரை கைது செய்தனர்.