தஞ்சாவூர், அக்.14 - தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை கொண்டா டும் வகையில் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கு வளாகத்தில், மாணவ, மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டி சனிக் கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், மாவட்ட ஆட்சி யர் தீபக் ஜேக்கப் ஆகியோர் கொடிய சைத்து துவக்கி வைத்தனர். இப்போட்டி 13,15,17 வயதுக்குட்பட்டோர் என மூன்று அணிகளாக நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்டோர் பாலாஜி நகர், ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி சாலை, பிள்ளையார்பட்டி புறவழிச்சாலை ரவுண்டானாவை அடைந்து, மீண்டும் அன்னை சத்யா அரங்கத்திற்கு வந்தனர். இதில் வென்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, 2 ஆம் பரிசாக ரூ.3000 என வழங்கப் பட்டன. மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், முதன்மைக்கல்வி அலுவலர் மதன் குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கற்பகம், மாவட்ட கூடைப்பந்து பயிற்றுனர் கா.பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.