மயிலாடுதுறை, டிச.1 - மயிலாடுதுறை மாவட்டம் அகர கீரங்குடி ஊராட்சிக்குட்பட்ட முட்டம் கிராமத்தில் போலியான ஆவணங் களை சமர்ப்பித்து பல லட்சங்களை கிராம நிர்வாக அலுவலரே மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது. மயிலாடுதுறை வட்டத்திற்குட்பட்ட அகரகீரங்குடி ஊராட்சிக்குட்பட்ட முட்டம் கிராமத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு சுமார் 450 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்தி ருந்தனர். அந்த பயிர்களுக்கு, சிட்டா, அடங்கலுடன் கிராம நிர்வாக அலுவ லர் திருமலைசங்கு என்பவரிடம் சமர்ப் பித்து பயிர்க் காப்பீட்டினையும் செய்திருந்தனர். அந்த பருவத்தில் பெய்த கனமழையின் காரணமாக சம்பா பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகை யாக ஏக்கருக்கு 68 சதவீத தொகையாக ரூ.22,000-த்தை காப்பீட்டு நிறுவனம் அறி வித்தது. இந்த காப்பீட்டுத் தொகையானது 4-இல் ஒரு பங்கு விவசாயிகளுக்கு வந்து சேரவில்லை. இதையடுத்து, இழப்பீட் டுத் தொகை கிடைக்காத விவசாயி கள் வேளாண்துறை அதிகாரிகளை அணுகியுள்ளனர். அவர்களிடம் உழவன் செயலியை பயன்படுத்தி காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதா? என்பதை தெரிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் விளக்கியுள்ளனர். இதையடுத்து, உழவன் செயலியில் பார்த்த விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அதில், அதே புல எண்ணில் வேறொரு நபருக்கு தொகை செலுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த நபர்கள் யார்யார் என ஆய்வு செய்ததில், கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்குவின் மனைவி, மகள் மற்றும் உறவினர்கள் என்பது தெரியவந்தது. மேலும் சிலரது புல எண்ணுக்கான காப்பீட்டுத் தொகை கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்குவின் பெய ருக்கே வரவு வைக்கப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளுடைய நிலத்தின் பெயரில் வங்கியில் பயிர்க்கடனும் பெற்று அதற்கு விவசாய தள்ளுபடியையும் பெற்றுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து, அவரிடம் நேரில் சென்று விவசாயிகள் கேட்ட போது அவர் அலட்சியமாக பதிலளித்த தாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட விவ சாயிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் புதனன்று புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்கு போலியான சிட்டா, அடங்கல் வழங்கி மறையூர் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றும், அதன்பேரில் பயிர்க் காப்பீடு பெற்றும் ஊழல் செய்துள்ளதாகவும், அவர் மீது விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ள னர். காப்பீடு மூலம் மட்டுமே சுமார் 100 ஏக்கர் பயிருக்கு ரூ.22 லட்சம் முறைகேட் டில் ஈடுபட்டுள்ளதாகவும், வங்கிக் கடன் பெற்ற வகையில் பல லட்சம் முறை கேடு செய்துள்ளதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கிராம நிர்வாக அலுவலரே போலியான ஆவணங் களை வைத்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் காப்பீட்டு தொகையில் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது விவசா யிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.