புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். இயக்குனர் ஆர்.சுதர்சன், துணை முதல்வர் எஸ்.குமாரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக நல விரிவாக்க அலுவலர் வள்ளி, சமூக சேவகர் நித்யா ஆகியோர் பெண் குழந்தைகளுக்கான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.