அறந்தாங்கி, செப்.6 - பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இணைந்து மாநில அளவிலான நான் முதல் வன் திட்ட கருத்தரங்கத்தை நடத்தின. இதில், நான் முதல்வன் திட்டத்தில் மாநில அளவில் சிறப்பாக செயலாற்றி வரும் கல்லூ ரிகளில் முதன்மை வகிக்கும் கல்லூரிகளுக் கான விருதை, அறந்தாங்கி இராஜேந்திர புரம் நைனா முகமது கலை மற்றும் அறிவி யல் கல்லூரி பெற்றது. விருதினை கல்லூரி முதல்வர் மற்றும் பாரதிதாசன் பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் முனைவர் சி. செல்வத்திற்கு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக இயக்குநர் இன்னெசன்ட் திவ்யா மற்றும் பாரதி தாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் செல்வம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் முனை வர் கதிரேசன் ஆகியோர் வழங்கினர். மாநில அளவில், நான் முதல்வன் திட்டத்தில் சிறந்த ஒருங்கிணைப்பாளர் விரு துக்கு, நைனா முகமது கலை மற்றும் அறி வியல் கல்லூரியின் கணிதத் துறை பேராசிரி யர் முனைவர் என்.அருள் பாண்டியன் தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றார்.