districts

img

பாலஸ்தீன மருத்துவமனைகள் மீது தாக்குதல்: இஸ்ரேலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவாரூர்,அக்டோபர்.19-  பாலஸ்தீன மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தி குழந்தைகள் உட்பட ஏராளமானோரை கொன்ற இஸ்ரேல் அரசை கண்டித்து அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் சார்பாக திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலையும் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான மோதலையும் ஐக்கிய நாடுகள் சபை உடனே தலையிட்டு நிறுத்த வேண்டும். உணவு,மருந்து, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகளை பாலஸ்தீன மக்களுக்கு உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நடுநிலை தவறிய ஒன்றிய மோடி அரசை கண்டித்தும்  இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய ரயில் நிலையம் எதிரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  துணைத் தலை வர் அன்பு வே.வீரமணி தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர்கள் கே.என்.முருகானந் தம், வீ.தர்மதாஸ், மாவட்ட துணைச்செய லாளர் தங்க. தமிழ்செல்வன்  ஆகியோர்  கண்டன உரையாற்றினர்.