districts

img

தாழை இருதயநகர் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கக் கோரிக்கை

மயிலாடுதுறை, ஜூலை 7 -

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் திருமுல்லைவாசல் ஊராட்சி தாழந்தொண்டி கிராமத்தில் உள்ள தாழை இருதயநகர் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

   தாழை இருதய நகரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் வெயிலில் பேருந்துக்காக காத்திருக்கின்றனர். இதனால், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் பலமுறை மயங்கி விழுந்துள்ளனர். இதுகுறித்து சம்பந் தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை  விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.

   இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர் உள்ளிட்ட அதி காரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில், பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க  உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.  

   ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கிளைச் செயலாளர் அன்பழகன் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.மாரியப் பன், ஒன்றியச் செயலாளர் கே.கேசவன், மாவட்டக் குழு உறுப்பினர் எல்.சுந்தர லிங்கம் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர் கள் உரையாற்றினர். கிளை உறுப்பினர்கள், தாழை இருதய நகர், தந்தை பெரியார் நகர்  மற்றும் தாழந்தொண்டி கிராம பொது மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

;