districts

img

கலை இலக்கிய இரவை விடிய விடிய நடத்த அனுமதி வழங்க வேண்டும் எழுத்தாளர் சங்க மாநாடு கோரிக்கை

சங்கரன்கோவில், ஜூன் 28 கலை இலக்கிய இரவு எனும் கலை நிகழ்வை விடிய விடிய நடத்த தமிழக  அரசு அனுமதி வழங்க வேண்டும் என  சங்கரன்கோவிலில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்  கலைஞர்கள் சங்கம் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் தென்காசி  மாவட்ட முதல் மாநாடு  சனி, ஞாயிறு  ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது.  சனிக்கிழமை நடைபெற்ற கலை இலக்கிய இரவு நிகழ்ச்சிக்கு மருத்து வர்.வி.எஸ்.சுப்பராஜ் தலைமை வகித் தார். நகராட்சி உறுப்பினர் ராஜேஸ்வரி இசக்கியப்பன், எழுத்தாளர் நாறும்பூ நாதன், கோமதிஅம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ந.பழனிச் செல்வம், சி.எஸ்.எம்.எஸ்.சங்கர சுப்பிரமணியன், வள்ளிநாயகம், முத்துக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திரைக்கலைஞர் ரோகிணி
இதைத்தொடர்ந்து மதிப்புறு மனிதர்  விருது வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. மருத்துவர் அம்சவேணி சுப்பராஜ், டீக் கடை முருகன், பஞ்சர் சுப்பையா ஆகியோருக்கு மதிப்புறு மனிதர் விருதுகளை திரைக்கலைஞர் ரோகிணி வழங்கினார்.பின்னர் தொட்டு விடும் தூரத்தில் வானவில் என்ற கவிதை நூலை அவர் வெளியிட தொழி லதிபர்கள் ஆ.வள்ளிராஜன், திவ்யா எம்.ரெங்கன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை மாவட்ட மாநாடு மு.சு.மதிய ழகன், வே.சீதாலெட்சுமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. நகரத் தலைவர் ப.தண்டபாணி அஞ்சலி தீர்மா னம் வாசித்தார். நெல்லை மாவட்ட  செயலர் வண்ணமுத்து மாநாட்டைத்  தொடக்கி வைத்தார். செயலர் அறிக் கையை மாவட்ட செயலர் பக்ருதீன் அலிஅகம்மது,.கலை இலக்கிய அறிக் கையை ந.செந்தில்வேல், பண்பாட்டு அறிக்கையை க.பிச்சுமணி ஆகியோர் வாசித்தனர்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத்  துணைப் பொதுச் செயலரும், எழுத்தா ளருமான கா.உதயங்கர் பேசினார். தமிழக பண்பாட்டு வரலாற்றில் கலை இலக்கிய இரவு என்ற கலை நிகழ்வு புதிய கொடையாக உள்ளது.எனவே கலை இலக்கிய இரவை விடிய விடிய நடத்த தமிழக அரசு அனுமதி  வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரி களில் நம்முடைய பாரம்பரிய நாட்டுப் புற கலைகளான வில்லிசை, பறை யிசை, நாட்டார் இசை, கரகாட்டம் போன்றவற்றை கற்பிப்பிதற்கான கலை  ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். வாசுதேவநல்லூர் அருகே திருமலாபுரத்தில் முதுமக்கள் தாழி போன்ற பண்டைய கால பொருள்கள் கிடைக்கப் பெற்றன. அந்த இடத்தில்  தொல்லியல் துறையினர் அகழாய்வு நடத்த வேண்டும். தென்காசி மாவட்டத் தில் இசை பயிற்சிப் பள்ளி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆ.ஆத்திவிநாயகம் நன்றி கூறினார்.