கரூர், மே 30-
வருவாய் ஆய்வாளரை தாக்கிய ஊராட்சி மன்றத் தலைவரை கண்டித்து கரூ ரில் வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.
திருச்சி மாவட்டம் துறை யூர் உள்வட்ட வருவாய் ஆய் வாளர் பிரபாகர், மணல் கொள்ளை தடுப்பில் ஈடு பட்டிருந்த போது, ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வ ரன் உள்ளிட்ட சமூக விரோ திகள் கொலை வெறித் தாக் குதல் நடத்தியதை கண்டித் தும், தாக்குதலில் ஈடுபட்ட வர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும்.
தாக்குதல் நடத்திய முதல் குற்றவாளியான மகேஸ் வரன் என்பவரை ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிலி ருந்து நீக்கம் செய்திட வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் கரூர் மாவட்டக்குழு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப் பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர். சண்முகம் தலைமை வகித் தார். மாநில துணை தலை வர் கு.குமரேசன், மத்திய செயற்குழு உறுப்பினர் ஓ.பி.ஆர்.செந்தில் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி வட்டாட்சி யர் அலுவலகம் மற்றும் ஆவு டையார்கோவில் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு வரு வாய்த் துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். வட்டத் தலைவர் பிரவீன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ஜபருல்லா, மாவட்ட இணைச் செயலாளர் முத்த ரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.