districts

img

தஞ்சை தொகுதி திமுக வேட்பாளராக வழக்கறிஞர் ச.முரசொலி அறிவிப்பு

தஞ்சாவூர், மார்ச் 20-   திமுக கூட்டணியில் தஞ்சா வூர் நாடாளுமன்றத் தொகுதி  வேட்பாளராக வழக்கறிஞர்  ச.முரசொலி அறிவிக்கப்பட்டு உள்ளார். வேட்பாளர் முரசொலி, தஞ்சாவூர் வட்டம் திருவை யாறு சட்டமன்றத் தொகுதி, தென்னங்குடி கிராமத்தில் 26.6.1978 இல் பிறந்தார். இவரு டைய தாத்தா தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியில் இயக்குநராக இருந்தவர். இவ ரது தந்தை 1971 ஆம் ஆண்டு  ஊராட்சி மன்ற தலைவராக வும், தென்னங்குடி தொடக்க வே ளாண்மை சங்கத் தலைவராகவும் பதவி வகித்தவர். இவர் இயற்பி யல் இளங்கலை பட்டப் படிப்பை, தஞ்சாவூர் மன்னர்  சரபோஜி அரசு கல்லூரியிலும், இளங்கலை சட்டப் படிப்பை  பெங்களூரு ராம் மனோகர்  லோகியா சட்டப் பல்கலைக் கழகத்திலும் முடித்துள்ளார். இவர் 2004 முதல் தென்னங் குடி ஊராட்சி பிரதிநிதியாக வும், 2006 – 2011 வரை தஞ்சாவூர் ஒன்றி யக் குழு உறுப்பின ராகவும், 2014-2020  வரை தி.மு.க பொதுக் குழு உறுப்பின ராகவும், 2020 இல்  தஞ்சை வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக நியமிக்கப் பட்டு. 2022 இல் நடைபெற்ற  திமுக வின் 15 ஆவது அமைப்பு  தேர்தலில் தஞ்சை வடக்கு ஒன்றியக் கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்