districts

கனவுலகில் மிதந்த அண்ணாமலை

திருச்சிராப்பள்ளி சிறுகனூரில் பாரிவேந்தர் நடத்தும் இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாரிவேந்தர், ரவி பச்சமுத்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் பேசிய அண்ணாமலை, “ மாநாட்டு அரங்கிற்குள் தமிழருவி மணியனுடன் நுழைந்தபோது, இரண்டு மடங்கு கூட்டம் வெளியே காத்துக்கொண்டிருக்கிறது. அப்படியென்றால் உள்ளே இடமில்லாமல் தான் வெளியே காத்திருக்கிறார்கள் என்றேன். கூட்டத்திற்கு வந்தவர்களையும் நிறுத்திக் கேட்டோம். “உள்ளே இடமில்லை; வெளியில் நிற்பதாகக் கூறினார்கள்” என்றார். அவர் அப்படி பேசிக் கொண்டிருந்த போது, பெரும்பாலும் காலிச் சேர்களைத்தான்  பார்த்துக் கொண்டிருந்தனர். மாநாட்டில் பாரிவேந்தர் பேசியபோது “மக்கள் கூட்டம் இருந்துள்ளது. ஆனால், பாஜக மாநிலத் தலைவர் பேசியபோது 80 சதவீத இருக்கைகளில் ஆட்களைக் காணவில்லை” என்பதை காட்சி ஊடகங்கள் சில அம்பலப்படுத்தியுள்ளன. உண்மையை மட்டுமே கூறுவதாகச் சொல்லும் ஓர் ஊடகம், 28 நிமிடம் 10 நொடி ஓடிய காணொலி ஒன்றை பதிவிட்டிருந்தது. அந்தக் காணொலி அண்ணாமலை பேசியது. 28 நிமிட காணொலியில் அதிகபட்சம் மக்கள் கூட்டத்தை நான்கு முறை காட்டினார்கள். அதில் தெரிந்தது அதிகபட்சம் 150 பேர் தான் இருந்தனர். லட்சம் பேர் கூடுவார்கள் என அறிவித்திருந்த நிலையில், சில ஆயிரம் பேரைக் கூட அந்த ஊடகம் காட்டவில்லை.