புதுக்கோட்டை, ஜூன் 18 -
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கோலிவில் வழிபாடு உரிமை கேட்டதால் ஆத்திரமடைந்த சாதி ஆதிக்க சக்திகள் பட்டியலின மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திரு மயத்தை அடுத்துள்ளது விராச்சிலைக் கிராமம். இங்கு ஸ்ரீமது அடைக்கலம் காத்தாள் அம்மாள் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் காலம்காலமாக பட்டி யலின மக்கள் உள்ளி;ட்ட அனைத்துச் சமூகத்தினருக்கும் வழிபாட்டு உரிமை இருந்து வந்துள்ளது. குறிப்பாக ஒவ்வொரு சமூகத்தினருக்கும் கோவில் திருவிழாவின் போது ஒவ்வொரு கடமை கள் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தலித் மக்க ளுக்கான கடமையை செய்யவிடாமல் சாதி சக்திகள் தடுத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், கோவிலில் தங்களுக் கான கடமையைச் செய்யவும், வழிபாடு உரிமையைப் பெற்றுத்தரவும் கோரி பட்டி யல் இன மக்களின் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்நிலையில், விராச்சிலை ஸ்ரீமதி அடைக்கலம்காத்தாள் அம்மாள் கோவில் திருவிழாவின் 10-ஆம் நாள் திருவிழா கடந்த ஜூன் 14 அன்று நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் கலந்துகொண்ட பட்டிய லின மக்களை சாதி ஆதிக்க மனோபாவ சிந்தனை உள்ள சிலர் கண்மூடித்தன மாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாய மடைந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த வசந்தகுமார் (25), பிரசாத் (19), பாரதி ராஜா (21), மோகன் (21), ஜெகதீஸ் (19), ஆண்டியப்பன் (63), சின்னம்மாள் (75) ஆகியோர் படுகாயமடைந்து புதுக் கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபர்களை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலை வர் டி.சலோமி, செயலாளர் சி.ஜீவா னந்தம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சி.அன்புமணவாளன், சு.மதியழகன், துரை.நாராயணன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஆ.குமாரவேல் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தனர்.
இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் டி.சலோமி, செயலளார் சி.ஜீவானந்தம் ஆகியோர் தெரிவிக்கையில், விராச்சிலையில் நடந்துள்ள சம்பவம் அப்பட்டமான மனித உரிமை மீறல். பட்டியிலின மக்களுக்கு உரிய வழிபாட்டு உரிமையையும், கோவி லில் காலம் காலமாக அவர்கள் செய்து வந்த பணியையும் பெற்றுத்தருவதும் அரசின் கடமையாகும். இதை உறுதி செய்யும் அதே நேரத்தில், பட்டியல் இன மக்கள் மீது தாக்குதல் தொடுத்த சாதி ஆதிக்க சக்திகள் மீது மாவட்ட நிர்வாகம் காவல்துறை எடுக்க வேண்டும் எனத் தெரி வித்துள்ளனர்.