தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுச் சார்பில் 10- ஆம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவிகளை ஊக்குவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி லட்சுமி பிரியா தலைமை வகித்தார். பள்ளி முதுகலை ஆசிரியர் கல்யாணி, பாபநாசம் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஜாபர் அலி, ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.