திருவாரூர், செப்,28- தமிழ்நாடு மின் வாரியம் திருவாரூர் வட்ட நகர்ப் பிரி வில் பணிபுரியும் கேங்மேன் மணக்கால்- கீரங்குடி பகு தியை சேர்ந்த தமிழரசன் புத னன்று மாலை மின்கம்பத் தில் பணிபுரியும் போது மின் விபத்து ஏற்பட்டு உயிரி ழந்தார். தமிழரசன் மறைவிற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழரசன் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக 25 லட்சம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலி யுறுத்தி திருவாரூர்- தஞ்சா வூர் சாலையில் விளமல் அருகே சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன் தலைமையில் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், சிஐடியு மாவட் டத் தலைவர் என்.அனிபா, சிஐடியு நிர்வாகிகள் ராஜேந்திரன், மாலதி, வைத்தியநாதன், கஜேந்தி ரன் 250-க்கும் மேற்பட்ட சிஐ டியு நிர்வாகிகள் மற்றும் தமி ழரசன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறி யல் சுமார் ஐந்து மணி நேரம் நீடித்தது. பின்னர் நடைபெற்ற பேச்சுவார்தையில், உயிரி ழந்த தமிழரசன் மனை விக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அரசு வேலை வழங்கப்படும். அரசு சார்பில் கிடைக்கும் இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தரப்படும் என அளிக்கப்பட்ட உத்தர வாதத்தை அடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.