districts

img

சென்னை பெருந்திரள் போராட்டத்தை விளக்கி கரூரில் அனைத்து தொழிற்சங்கத்தினர் நடைபயணம்

கரூர், நவ.22 - விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த  வேண்டும். தேசிய குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.26 ஆயிரம் வழங்க  வேண்டும். திருத்திய தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்.  மின்சார திருத்த சட்ட மசோதா 2022-ஐ  திரும்ப பெற வேண்டும்.  முன்பணம் செலுத்தி மின்சாரத்தை உபயோகிக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி எல்பிஎப், சிஐ டியு, ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எஸ்கேஎம்  உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நவம்பர் 26, 27 மற்றும் 28 தேதிகளில் சென்னை ஆளுநர் மாளிகை முன்பு பெருந்திரள் அமர்வு போராட்டம் நடைபெற உள்ளது.  இந்த போராட்டத்தை பொதுமக்க ளுக்கு விளக்கும் வகையில், கோ ரிக்கை விளக்க நடைபயண பிரச்சாரம் கரூர் 80 அடி சாலையில் துவங்கி, லைட் ஹவுஸ் கார்னரில் பிரச்சார தெரு முனை கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு எல்பிஎப் மாவட்டத் தலைவர் வி.ஆர்.அண்ணாவேலு தலைமை வகித்தார். எல்பிஎப் மாவட்டச்  செயலாளர் பழ.அப்பாசாமி, ஐஎன்டி யுசி மாவட்டத் தலைவர் கே.பழனிச் சாமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. முருகேசன், ஏஐடியுசி மாவட்டச் செய லாளர் ஜி.பி.வடிவேலன், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் எம்.பால்ராஜ், எஸ்.கே.எம் ஒருங்கிணைப்பாளர் ராஜ சேகர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கா.கந்தசாமி ஆகி யோர் பேசினர்.  நூற்றுக்கணக்கான மத்திய, மாநில தொழிற்சங்க தொழிலாளர்கள், கட்டு மான சங்க தொழிலாளர்கள் பேரணி யில் கலந்து கொண்டனர்.