புதுக்கோட்டை, நவ.29 - ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கு இடையூறாக இருந்து வரும் இலுப்பூர் வட்டாட்சியரைக் கண்டித்து புதுக்கோட்டையில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றி யத்துக்கு உட்பட்டது திருநல்லூர் ஊராட்சி. இங்கு இயங்கி வந்த ஊராட்சி மன்ற அலுவலகம் 40 ஆண்டுகளுக்கு மேலான பழைய கட்டிடம் என்பதால் தானாக இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், அந்த பழைய கட்டி டத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய ஊராட்சிமன்ற அலு வலகம் கட்ட ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே இடத்தில் ஊராட்சிமன்ற அலுவல கம் கட்டுவதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அதே இடத்தில் கட்டலாம் என நீதிமன்றமும் தீர்ப்பளித்தது. இந்நிலையில், அந்த இடத்தில் ஊராட்சிமன்ற அலுவலகம் கட்டினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என இலுப்பூர் வட்டாட்சியர் மாவட்ட நிர்வாகத் திற்கும், நீதிமன்றத்திற்கும் தெரி வித்ததால் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டும் கட்டிடம் கட்டமுடியாத சூழல் ஏற்பட்டது. இதனைத் தொ டர்ந்து தவறான தகவல் கொடுத்த இலுப்பூர் வட்டாட்சியரைக் கண்டித்தும், அதே இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட வலியுறுத்தியும் அனைத்துக் கட்சி களின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அரு கில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ஆர்.சுப்பையா, ஒன்றியச் செயலாளர் எஸ்.ரகு பதி, ஊராட்சி மன்றத் தலைவர் மணிமுத்து, அதிமுக சார்பில் ஏ.பழனிச்சாமி, திமுக சார்பில் எம்.கணபதி, மதிமுக சார்பில் ஏ. வீரபத்திரன், விவசாயத் தொழி லாளர் சங்க ஒன்றியச் செயலாளர் எம்.ஜோஷி, தலைவர் சி.ஆறு முகம் உள்ளிட்டோர் பேசினர்.