districts

img

விவசாயியுடன் கலந்துரையாடிய வேளாண் கல்லூரி மாணவிகள்

பொன்னமராவதி, ஏப்.24 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டத்தில் உள்ள வேந்தன்பட்டி கிராமத்தில் துணை தோட்டக்கலை அலுவலர் செல்வராஜ் தலைமையில், புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள், விவசாயி சண்முகத்தின் விவசாய நிலத்தை பார்வையிட்டு, அவருடன்  கலந்துரையாடினர். விவசாயி சண்முகம், அவரது தோட்டத் தில் கரும்பு, செவ்வாழை, பருத்தி, தென்னை, மாமரம், தர்பூசணி, வெண்டைக்காய் போன்றவற்றை பயிர் செய்து வரு கிறார். இதில் அவர் சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்தி  வருகிறார். மேலும் மாமரத்தில் குருத்து ஒட்டு, நெருக்கு ஒட்டு  போன்றவற்றை மாணவிகள் விளக்கினார்.