மயிலாடுதுறை, மே 4 - மயிலாடுதுறை மாவட்டம் செம்ப னார்கோவில் அருகேயுள்ள மாமா குடி ஊராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஊராட்சி அலுவ லகம் முன்பு புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பி னர் எம்.துரையரசன் தலைமை வகித் தார். மாவட்ட செயலாளர் பி.சீனிவா சன், ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ரவிச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் வீ.எம்.சரவணன், ஒன்றி யக் குழு உறுப்பினர்கள் எம்.எஸ். ராஜேந்திரன், ஜி.கருணாநிதி, எஸ். சிவசுப்ரமணியன், ஹெச்.சபீர் அகமது, விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் என்.பன்னீர், வாலிபர் சங்க ஒன்றிய துணைத்தலைவர் வரதரா ஜன், ஆர்.சிவராஜ், கிளை செயலா ளர் ராஜகோபால் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாமாகுடி ஊராட்சியின் தலைவ ராக பதவி வகிப்பவர் விஜயா. ஆனால் பேருக்குத்தான் தலைவரே தவிர, அலுவலக இருக்கையில் அமர்ந்து கொண்டு அதிகாரம் செய்வ தெல்லாம் விஜயாவின் கணவரான டாஸ்மாக் ஊழியர் கோபிநாத் தான். சாதாரண அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை வைத்தா லும், அதை செய்து தராமல் அலட்சி யப்படுத்துவதோடு கோரிக்கையை வலியுறுத்துபவர்களை மிரட்டும் போக்கையும் ஊராட்சி தலைவரின் கணவர் கடைப்பிடித்து வருகிறார். இந்நிலையில் ஊராட்சிக்குட்பட்ட அப்பராசப்புத்தூர் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கட்சியால் போராடி பெற்ற குடியிருப்புகளுக்கு வீட்டுவரி ரசீது தர முடியாது என ஊராட்சி தலை வரின் கணவர் கூறி வருகிறார். அப் பகுதி முழுவதும் தெரு விளக்குகள் எரியாததால், இரவு நேரங்களில் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களால் பாதிப்பு ஏற்படுகிறது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இறப்பு ஏற்பட் டால் ஈமக்கிரியை செலவீனங்களுக் காக அரசு வழங்கும் மானியத்தைக் கூட தராமல் அடாவடியாக பேசுகிறார் என்று பாதிக்கப்பட்டவர்கள் வேத னைப்படுகின்றனர். மேலும் அப்ப ராசப்புத்தூர் காலனித் தெருவில் உள்ள 10 குடும்பங்களுக்கு நூறு நாள் வேலைக்கான அட்டையையும் வழங்க முடியாது என கூறுவதாக குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் ஊராட்சி நிர்வா கத்தின் சீர்கேட்டை கண்டித்தும், ஊராட்சியில் காலனித்தெரு முதல் மெயின்ரோடு வரை தெருவிளக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும். மாமாகுடி ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு வரி ரசீது வழங்க வேண்டும். குடிநீர் பிரச்சனையை உடனே போக்கிட வேண்டும். ஈம கிரியை சடங்கு மானியத்தை கொடுக்க மறுப்பதை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர். பின்னர் போராட்ட இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஊராட்சி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போதும் அடியாட்களு டன் காரில் வந்த ஊராட்சி தலைவரின் கணவர் கோபிநாத், மார்க்சிஸ்ட் கட்சியினரை தரக் குறைவாக பேசி தாக்குதலில் ஈடுபட்டார். பேச்சு வார்த்தையிலிருந்து வெளியேறிய மார்க்சிஸ்ட் கட்சியினர், அராஜ கத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர் கோபிநாத் மீது பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதிகாரிகள், காவல்துறையினர் முன்பாகவே அடியாட்களை வைத்துக் கொண்டு தாக்குதலில் ஈடு படும் ஊராட்சி தலைவரின் கணவர் கோபிநாத், சாதாரண மக்களின் அடிப்படை தேவைகளை எப்படி பூர்த்தி செய்வார்?